ஆண்டு தோறும் வரும் 12 சிவராத்திரிகளில் மாசி மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என இந்து சமயம் போற்றுகிறது. மாசி மாதம் வரும் மகா சிவராத்திரியில் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்வதாக நம்பப்படுகிறது. அதனால் அன்று முழுவதும் ஒருவர் விழிப்புடன் இருந்தால் இயற்கையாகவே நம்மில் இருக்கும் உயிர்சக்தியும் மேல்நோக்கி நகர்ந்திடும் என ஆன்மீகவாதிகளும், சித்தர்களும் கூறி உள்ளனர்.

இதன்படி நாடு முழுவதும் மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்று வருகின்றன. மக்கள் அதிகாலை முதலே நீராடி அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். முக்கிய சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் சிவராத்திரியை முன்னிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆந்திராவில் பக்தர்களை தாக்கிய யானை கூட்டம்.. உடல் நசுங்கி பலியான பக்தர்கள்.. நிவாரணம் அறிவித்தார் பவன் கல்யாண்..

இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திராவில் இருவேறு இடத்தில் ஆற்றில் குளிக்க சென்று தந்தை மகன் உள்பட 7 நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தாடிபுடி கிராமத்தை சேர்ந்த 11 இளைஞர்கள் மகாசிவராத்திரி என்பதால் அங்குள்ள கோதவரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அனைவரும் மணல் திட்டுகளில் நடந்து சென்று கோதாவரியில் குளித்தனர். அப்போது ஆற்றில் ஒரு இடத்தில் இருந்த மணல் குழியில் அனைவரும் சிக்கிக்கொண்டனர். 11 பேரில் ஆறு பேர் நீந்தி உயிர் தப்பினர். ஆனால் ஐந்து பேர் காணாமல் போயினர். உடனடியாக தப்பி வெளியேறிய இளைஞர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருமலை ஷெட்டி பவன் (20) பாதாள துர்கா பிரசாத் (19) அனிசெட்டி பவன் (19) காரே ஆகாஷ் (19) படால சாய் (19) ஆகிய ஐந்து இளைஞர்களையும் சடலமாக மீட்டனர். அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதேபோன்று ஆந்திராவின் என்டிஆர் மாவட்டத்தின் பெனுகன்சிப்ரோல் மண்டலத்தில் உள்ள கொல்லிகுல்லா கிராமத்தைச் சேர்ந்த 25 உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒரு பேருந்தில் ஏறி ஸ்ரீசைலம் புறப்பட்டனர். ஸ்ரீசைலத்திற்கு சிவன் கோயிலில் மகா சிவராத்திரியில் புனிய நீராட ஸ்ரீசைலம் மலைக்குக் கீழே கிருஷ்ணா நதிக்கரையில் புனித நீராடினர். புனித நீராடும்போது பெருகு குரவையாவின் (40) மகன் 8 வயது கால் தவறி ஆற்றில் விழுந்தார். குளித்துக் கொண்டிருந்தபோது வழுக்கி விழுந்த மகனைப் பிடிக்க முயன்றபோது, குரவையாவும் வழுக்கி விழுந்து நீரில் மூழ்கி இருவரும் இறந்தார். பின்னர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
இதையும் படிங்க: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அப்போலோவில் அட்மிட்..! ஜனசேனா தொண்டர்கள் அதிர்ச்சி..!