சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், "2026ஆம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. நடைபெறபோகிறது. ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க." என்று கூறியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சுக்கு திமுகவில் பலரும் எதிர்வினையாற்றியிருதார்கள். இந்நிலையில் அமைச்சர் கே.என். நேரு விஜய்க்குப் பதில் அளித்துள்ளார்.

திருச்சியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், "நேற்று வரை நடிகராக இருந்தவர் (விஜய்), இன்று அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலுக்கு வந்து பொதுமக்களை ஒருமுறை கூட சந்திக்காதவர், கூட்டரங்கத்தில் கூட்டத்தை கூட்டிக் கொண்டு எங்களுக்கு திமுகதான் எதிரி என்று கூறுகிறார். அவரையும் திமுக சந்திக்கும். 2026இல் மு.க.ஸ்டாலின்தான் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வருவார்.
இதையும் படிங்க: தமிழின வெறுப்போடுதான் இருப்பீங்களா.? 'எம்புரான்' படக் குழுவை வெளுத்து வாங்கிய வேல்முருகன்.!!

முதல்வர் அமைதியாக இருந்தாலும், அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். மத்தியில் இருப்பவர்கள் திமுக ஆட்சியைஅகற்ற வேண்டும் என்று பேசி வருகிறார்கள். ஆனால் அவர்களால் தமிழ்நாட்டில் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. இன்னொரு பக்கம், பாஜகவுடன் சேரமாட்டோம் என்று சொன்னவர்கள் (அதிமுக) இப்போது ஓடிச் சென்று அவர்களுடன் சேர்கிறார்கள். அனைவரையும் சந்திக்க திமுகவினர் ஆயத்தமாக இருக்க வேண்டும்" என்று கே.என். நேரு பேசினார்.
இதையும் படிங்க: தவெகவை உலுக்கிய அடுத்த இழப்பு... போனில் ஆறுதல் சொன்ன விஜய்..!