தூத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பழைய கரூர் ரோடை சேர்ந்த 26 வயதான இளம்பெண். இவர் சில மாதங்களாக துாத்துக்குடியில் உள்ள தனியார் அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இளம்பெண்ணின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என அவரது குடும்பத்தினர் இளம் பெண்ணிற்கு தகவல் தெரிவித்தனர். இதனை எடுத்து இளம்பெண் தூத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி பயணித்தார்.

ரயில் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் நின்றது. அப்பொழுது விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்த லோடுமேன் சதீஷ்குமார் இவர் அங்குள்ள தனியார் பெயிண்ட் கடையில் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார். லோடுமேன் சதீஷ்குமார் ஈரோடு சென்று அங்கிருந்து கோவை செல்வதற்காக ஓகா ரயிலில் ஏறினார். அப்பொழுது சதீஷ்குமார் அதிக மது போதையில் இருந்தாக கூறப்படுகிறது.அவர் இளம்பெண்ணின் அருகே அமர்ந்திருந்துள்ளார்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் மற்றொரு ரயில் சைக்கோ..! போதையில் அட்ராசிட்டி..!
எக்ஸ்பிரஸ் ரயில் கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே வரும் போது சதீஷ்குமார், இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், அருகிலிருந்தவர்களின் உதவியோடு ரயில் பெட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த உதவி எண் 139 எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்தார்.

அவர்கள் திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை எடுத்து துரிதமாக செயல்பட்ட ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைசாமி இன்று அதிகாலை திண்டுக்கல் ரயில்வேஸ்டேஷனுக்கு வந்த ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வு செய்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சதீஷ்குமாரை, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன் ரயிலில் ஆந்திரா சென்ற கர்ப்பிணிக்கு வேலுார் அருகே சிலர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் இன்னும் அடங்காத நிலையில் தற்போது திண்டுக்கல்லில் இளம்பெண்ணுக்கு ரயிலில் பாலியல்
தொல்லை கொடுத்து வாலிபர் கைது செய்யப்பட்டிருப்பது ரயிலில் பயணிக்கும் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது.. வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.!