2025-2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டம் தொடங்க உள்ளது. இதில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

அப்போது கடந்த ஆண்டு தமிழக அரசின் வருவாய், வரவு செலவு கணக்குகள், பெற்ற கடன்கள், கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்த தகவல்களை வெளியிடுகிறார். இதேபோல், 2025ம் ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட செலவுகள், அதன் வருவாய் வரவுகள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையே தமிழக அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. நாளை வேளான் துறை சார்ந்த அறிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட உள்ளார்.
இதையும் படிங்க: 'மு.க.ஸ்டாலின் அவர்களே...இது பெரிய முட்டாள்தனம்..!' அண்ணாமலை ஆத்திரம்..!
17ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 5 நாட்கள் வரை நடைபெற உள்ள விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார். பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் வரவு செலவுகள், எந்த திட்டத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, கடன் பெற்றது, புதிய திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே பட்ஜெட் தாக்கலை ஒட்டி தமிழக அரசு ரூபாய்க்கான குறியீட்டை ரூ என தமிழில் குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பதால் இதில் மக்களை கவரும் விதமாக பல்வேறு திட்டங்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா? புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா? ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் விரிவாக்கம் செயப்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: நாளை தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்.. சென்னையில் 100 இடங்களில் நேரலையில் பார்க்க ஏற்பாடு.!