பொங்கல் திருவிழாவையொட்டி பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டம் 2009இல் தொடங்கப்பட்டது. முதலில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை என வழங்கப்பட்டது. பிறகு ரூ.100, ரூ. 1000, ரூ.2500 என்றெல்லாம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு என மூன்று பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ரூ.1000 ரொக்கம் வழங்கப்படவில்லை. ரொக்கம் வழங்காதது பற்றி சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் கேள்வி எழுப்பியபோது, "தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்" என்று அமைச்சர் துரைமுருகன் இது தேர்தலுக்கான திட்டம் போல வெளிப்படையாகப் பேசினார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை 33 லட்சம் குடும்பத்தினர் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு. ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய், 2021ல் 2,500 ரூபாய், 2022ல் ரூபாய் 1000, கடந்த 2023ல் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது.
ரொக்கமும் சேர்த்து வழங்கப்பட்டதால் கடந்த ஆண்டுகளில், அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகிய மூன்று பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. ரொக்க பணம் வழங்கப்படவில்லை. மொத்தம் 2.21 கோடி ரோஷன் அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பை, 1.87 கோடி பேர் வாங்கியுள்ளனர். மீதி 33 லட்சம் பேர் வாங்கவில்லை.
விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர், கொடுத்த அரிசியும், சர்க்கரையும் எடை குறைவாக வழங்கப்பட்டதாகவும், திமுக அரசு சொன்ன வாக்குறுதிப்படி ரொக்கப் பணம் கொடுக்காததாலும், தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல, வெகு விரைவில் 2026-ல் இந்த ஆட்சியையும் புறக்கணிப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அரசின் மீது அதிருப்தியால் தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்" என்று அறிக்கையில் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தயவு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றிவிடாதீர்கள்.. மோடி சர்க்காருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!
இதையும் படிங்க: திமுக ஆட்சி முடிய 13 அமாவாசைதான் இருக்கு.. திமுகவை பொளக்கும் பழனிச்சாமி!