ஒசூர் அருகே விவசாய நீர்சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்த 3 வகுப்பு மாணவனை காப்பாற்ற சென்ற பள்ளி தலைமையாசிரியரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு 3 வகுப்பு படித்து வந்த நித்தின்(8) என்னும் மாணவர் படித்து வருகிறார். பள்ளிக்கு பின்புறம் உள்ள விவசாய நிலத்தின் பாசனத்திற்காக தொட்டி அமைத்து நீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் உணவு இடைவேளையின் போது விவசாய நிலத்திற்குச் சென்ற நிதின், நீர் சேகரித்து வைத்திருந்த தொட்டியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கேள்விப்பட்ட பள்ளியில் இருந்த தலைமையாசிரியர் கவுரி சங்கர் ராஜா(53) என்பவர் தண்ணீர் தொட்டியில் இருந்த சிறுவனை மீட்க சென்றுள்ளார். சிறுவனை மீட்க முயன்ற அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்தவர்கள் தொட்டிக்குள் இறங்கி தேடியுள்ளனர். அப்போது நிதின் உடன் தலைமையாசிரியரும் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மாணவனைக் காப்பாற்ற சென்ற தலைமை ஆசிரியரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சடலங்களை நீரில் இருந்து மீட்ட பாகலூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இதையும் படிங்க: பந்தயம் கட்டிய காளை உரிமையாளர்.. பறிபோன மாணவரின் உயிர்..
இதையும் படிங்க: நகை வியாபாரியை ரவுண்டு கட்டிய கொள்ளையர்கள்.. பறிபோன 1கோடியே 10 லட்சம் ரொக்க பணம்!