தமிழகத்தில் மார்ச் மாதம் வந்து விட்டாலே தேர்வுகள் தொடங்குவது வழக்கம். பன்னிரண்டாம் வகுப்பில் தொடங்கி வரிசையாக 11ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு என அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறும். அந்த வகையில் 2024-25 கல்வி ஆண்டு இறுதி கட்டத்தை நெருங்கியதை அடுத்து 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வு மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதே போன்று, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 1 - 9 ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு எப்போது? வெளியானது அப்டேட்!!

இந்த நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்வுக்காக மாணவர்களை பள்ளிகள் தயார் படுத்தி வரும் நிலையில் நாளை சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை மாவட்டத்தில் நாளை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள், தனியார் உள்பட அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என பள்ளிகல்விதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைய வெள்ளிக்கிழமைக்கான அட்டவணை அடிப்படையில் இயங்கும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: TNSTC Recruitment! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்...10 ஆம் வகுப்பு பாஸ் போதுமாம்!