நமது நாட்டின் தலைநகரான டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மத்தியில ஆளும் பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக ஆட்சியில் இல்லாததால் பிரபலமான தலைவர்கள் டெல்லியில் உருவாகாமல் போனார்கள். அதனால் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை கணிக்க முடியாமல் மக்களும், பத்திரிக்கையாளர்களும் திணறினார்கள். இதே நிலைதான் பாஜக கட்சிக்குள்ளும் நிலவியது.

முன்னாள் டெல்லி முதலமைச்சரான சாகிப்சிங் வர்மாவின் மகன் பர்வேஸ்வர்மா, முன்னாள் டெல்லி மாநில தலைவர் சதீஷ் உபாத்தியாயா,மற்றும் மகளிர் அணி தலைவியான ரேகா குப்தா,ஆகியோரது பெயர்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: அப்போது அப்பா… இப்போது மகன்..! டெல்லி முதல்வர் பதவியை தட்டிப்பறித்த பாஜகவின் 2 பெண்கள்..!
இந்த நிலையில் தான் நேற்று டெல்லியில் கூடிய பாஜக தலைமை ஒருங்கிணைப்பு குழுவினர் கூட்டத்தில் ரேகா குப்தா தான் அடுத்த டெல்லி முதல்வர் என்பது உறுதியாகி போனது. அதனை அடுத்து துணை முதல்வராக பரமேஸ்வர்மா மற்றும் மொத்தமாக 6 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

மக்களுக்கு அவ்வளவாக பரீட்சயம் இல்லாத புதிய முதல்வராக ரேகா குப்தா இருந்தாலும் அவர் கல்லூரி காலம் தொட்டே ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏ.பி.வி. பி அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தவராவார். மேலும் மகளிர் மோர்ச்சாவில் இளம் வயது முதல் தொடர்ந்து பணியாற்றி வந்திருக்கிறார்.
குஜராத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிரதமராக பொறுப்பேற்க வந்த டெல்லி வந்த மோடிக்கு 2013 ஆம் ஆண்டு மகளிர் அணி சார்பில் வரவேற்பு கொடுத்து அசத்தியவர் இந்த ரேகா குப்தா அப்போதிலிருந்து மோடிக்கும்,ரேகா குப்தாவை கட்சியின் தீவிர உறுப்பினர் என்கிற முறையில் நன்கு தெரியுமாம். 2013 ஆம் ஆண்டு மோடியுடன் ரேகா குப்தா எடுத்த ஒரு புகைப்படத்தை தற்போது அவரது ஆதரவாளர்கள் அதிகம் பரப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ரேகா குப்தா மிகவும் அதிரடியான ஆள் என்றும் கூறப்படுகிறார் மகளிர் அணியில் இருந்ததால் டெல்லியில் நடைபெறும் அனைத்து பாஜக தொடர்பான போராட்டங்களிலும் பங்கேற்று காவல்துறையினரையும் ஆளுங்கட்சியையும் செய்யும் ஒரு வழி செய்தவராம்.
மூன்று முறை டெல்லி தெற்கு பகுதியில் கவுன்சிலராக இருந்த ரேகா குப்தா ஒரு முறை டெல்லி தெற்கு மாநகராட்சியின் மாநகர மேயர் ஆகவும் பதவி வகித்துள்ளார். பிதம்பூர் மாநகர கவுன்சிலராக இருந்தபோது மாநகராட்சி கூட்டத்தில் ஏற்பட்ட இரு கட்சிகளுக்கு இடையே ஆன தகராறில் ஆம் ஆத்மி உறுப்பினர்களுடன் நேருக்கு நேர் மல்லு கட்டினார் ரேகா குப்தா.

அப்போது நேராக மேடைக்கு சென்றவர் அங்கிருந்த மைக் மற்றும் பொருட்களை பிடுங்கி அடித்து உடைக்கும் காட்சிகள் தற்போது வைரலாக்கப்பட்டு வருகின்றன. எவ்வளவு ஆவேசமாகவும் மோசமாகவும் செயல்படும் இந்த பெண்தான் நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த டெல்லி முதல்வர் என ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அதை கமெண்ட் செய்து வேகமாக பரப்பி வருகிறார்கள்.
டெல்லி முதல்வராக பதவி ஏற்கும் ரேகா குப்தா மைக்குகளை பிடுங்கி அடித்து உடைக்கும் காட்சி எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சொந்த கட்சியினரிடமும் பரபரப்பை கிளம்பி உள்ளது.
இதையும் படிங்க: கல்லூரி படிக்கும்போதே இப்படியா..? டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் புகைப்படம்- அதிர்ச்சியூட்டிய காங்கிரஸ் தலைவி..!