சமீப காலமாக பெண்கள், சிறுமிகள், பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகளவில் பாலியல் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வர துவங்கி உள்ளன. போலி என்.சி.சி முகாமிம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது.
பள்ளி ஆசிரியர்கள் 3 பேரால் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது. சக மாணவர்களே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது என கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவில் பாலியல் புகார்கள் வெளிவரத் துவங்கி உள்ளன. தற்போது +2 பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில், பொதுத்தேர்வு நடக்கும் ஹாலில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் நேற்று கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த உயிரியல் தேர்வினை எழுத சென்றார். அப்போது அந்த மாணவி தேர்வு எழுதிய அறையின் மேற்பார்வையாளராக வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ்(44) என்பவர் பணியில் இருந்தார்.
இதையும் படிங்க: நண்பர்கள் சேர்ந்து சிதைத்த கொடூரம்... அவதிப்பட்ட சிறுமிகள்... வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

இந்நிலையில் ஆசிரியர் ரமேஷ், அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த அந்த 17 வயது மாணவியின் தோலில் கை வைத்து மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி செய்வதறியாமல் திகைத்துள்ளார். இதனால் அந்த மாணவியால் தேர்வினை சரிவர எழுத முடியாமல் திணறியுள்ளார். தேர்வு முடிந்த பின் வெளியே வந்த அந்த மாணவி, மிகவும் சோகத்துடன் இருந்துள்ளார். அந்த மாணவியிடம், அவர் பயின்ற பள்ளியின் முதல்வர், ஏன் சோகமாக இருக்கிறாய். தேர்வு சரியாக எழுதவில்லையா என கேட்டுள்ளார்.

அப்போது தேர்வு அறையில் தன்னிடம் ஆசிரியர் ரமேஷ் நடந்து கொண்ட சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து அந்த பள்ளியின் முதல்வர் இது குறித்து, அந்த தேர்வு மையத்தின் பொறுப்பாளரான மேகலசின்னம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் ஆகியோர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் ஆசிரியர் ரமேசை அழைத்து சென்று விசாரணை நடத்தி பின்னர் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அங்க, இங்க கை வைப்பாரு.. மாணவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர்.. இங்கிலீஷ் வாத்தியார் போக்சோவில் கைது..