கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை மார்த்தால் பகுதியில் அந்த ஊர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மாணவ மாணவிகளுக்காக ஒரு படிப்பகம் நடத்தி வருகின்றனர். இங்கு தினமும் அப்பகுதி மாணவ, மாணவிகள் வந்து செல்வது வழக்கம். இந்த படிப்பகத்தின் அருகில் உள்ள பகுதியில் செடி, கொடிகள் அடர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இந்த புதர் பகுதியில் இருந்து திடீரென கோழி ஒன்று அதிக சத்தம் போட்டு கத்திக் கொண்டிருந்தது.

கோழியின் சத்தம் கேட்டதும் உடனடியாக அருகில் இருந்த இளைஞர்கள் ஓடிச் சென்று பார்த்த போது சுமார் 10 அடி நீளம் கொண்ட பெரிய மலைப் பாம்பு ஒன்று கோழியை விழுங்க முயற்சி செய்து கொண்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து மலைப் பாம்பை லாவகமாகவும், பாதுகாப்பாகவும் பிடித்தனர்.
இதையும் படிங்க: ‘மும்பை தாக்குதல் திட்டம் அமெரிக்காவுக்கு முன்பே தெரியும், முக்கிய நபரை பதுக்கியிருக்கிறது’.. முன்னாள் உள்துறை செயலர் பகீர் தகவல்..!

முன்னதாக இதுகுறித்து வனத்துறை அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த வனத் துறையினர், இளைஞர்கள் பிடித்து வைத்து இருந்த மலை பாம்பினை பத்திரமாக மீட்டு வணப்பகுதிக்குள் விட்டனர். மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்து கோழியை விழுங்க இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அதிமுக- பாஜக கூட்டணி… அமித்ஷா கொடுத்த உத்தரவும்… உத்தரவாதமும்… இ.பி.எஸுக்கு கிடுக்குப்பிடி..!