சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலணியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோ நிலத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாநகர மேயராக இருந்த பொழுது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைக்கேடான ஆவணங்கள் மூலமாக தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்குமாற்றம் செய்துள்ளதாக, சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல் கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா இருவர் மீதும் சிபிசிடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மருத்துவர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டதா? விளக்கம் அளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன்!!
இந்த வழக்கு தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தன் மீதான ரத்து செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எடுத்து இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அப்போது மா.சுப்பிரமணியன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அமைச்சரவை கூட்டம் நடப்பதால் இன்று விசாணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். இந்த வழக்கில் விடுவிக்க கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றச்சாட்ட மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மே ஆறாம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும், இதற்காக சமன் அனுப்புவதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சாதியவாதிகளிடம் தோற்கும் ஸ்டாலின் அரசு.! திமுகவை உரசிப்பார்க்கும் விசிக..!