அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் அம்மாவாசை அன்று மிளகாய் சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம். மாசி மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு சண்டி யாகம் நடைபெற்றது.யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் பக்தர்களின் வேண்டுதலின் பேரில் யாகத்தில் போடப்பட்டன. புடவைகளும் பக்தர்களின் வேண்டுதலின் பேரில் யாகத்தில் போடப்பட்டது. பின்னர் மா பலா வாழை மாதுளை திராட்சை கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் மற்றும் 108 வகையிலான மூலிகைகள் யாகத்தில் இடப்பட்டன.

பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டங்களில் இருந்த புனித நீரானது பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. யாகத்தில் ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, கடலூர் மதுரை, சென்னை, பெரம்பலூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபாராதனைக்கு பின்பு அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடப்பட்டது. முன்னதாக கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: பாஜக- திமுகவுக்கு எதிராக ஆக்ரோஷ அரசியல்… ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்ஸி பரபர அறிக்கை..!
இதையும் படிங்க: 6ஆம் வகுப்பு மாணவியிடம் அட்டகாசம் செய்த தமிழாசிரியர்.. பாடம் புகட்டிய போலீசார்..