மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சிவனாகரம் கிராமத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைவர் (DGP) சைலேந்திரபாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தார்.
அப்போது நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் மிகப்பெரிய குற்றங்களோ, சாதி கலவரங்களோ, மதக் கலவரங்களோ அல்லது தொடர் கொலை சம்பவங்களோ நடைபெறவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில குற்ற சம்பவங்கள் நடைபெறலாம். அதனை கொண்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்வது சரியல்ல. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறையினர் சிறப்பான முறையில் எடுத்து வருகின்றனர்.

குற்றவாளிகளுக்கு பயம் வேண்டும் என்கவுண்டர் என்பது மோசமான குற்றவாளிகளை பிடிக்கும் சூழலில், அவர்கள் காவலர்களை தாக்கும் போது பாதுகாப்புக்காக நடைபெறும் போர் சம்பவம் தான். இது போன்ற குற்றவாளிகளால் தாக்கப்பட்டு எத்தனையோ காவலர்கள் உயிரிழந்துள்ளனர். பல காவலர்கள் கை, கால்களை இழந்துள்ளனர். அப்படிப்பட்ட சூழலில் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்வது வழக்கம் தான். அதே நேரம் என்கவுண்டர் குற்றச் செயல்களை குறைத்து விடாது. ஆனால் குற்றச்செயல்கள் செய்பவர்களுக்கு ஓர் பயத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: ‘டிஜிட்டல் கல்வியறிவில்’ கேரளா மாநிலம் முதலிடம்.. இலக்கை எட்டி சாதனை..!

குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் குற்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பிச் செல்லலாம், பெண்களை ஏமாற்றி நகைகளை திருடிச் செல்லலாம் என நினைத்து வருபவர்களை சுற்றி வளைத்து பிடிக்கும் போது தமிழ்நாட்டில் காவலர்களிடம் பிடிபட்டால் சுட்டுக் கொன்று விடுவார்கள் என்கிற பயம் அவர்களுக்கு வர வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விடும் அளவிற்கு எதுவும் நடைபெறவில்லை. அப்படி ஏதேனும் நடைபெற்றால் நாமும் அதற்கு குரல் கொடுப்போம்.
இதையும் படிங்க: எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 6 ஆண்டுகளில் ரூ.10,443 கோடி.. ஆர்டிஐ தகவல்..!