விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மல்லி வள நாட்டின் கலை இலக்கிய பெருவிழா போட்டிகள் நடைபெற்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி ரோட்டில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான போட்டிகள் "மல்லி வள நாட்டின் கலை இலக்கிய பெருவிழா" என்ற பெயரில் நடைபெற்றது.

இப்போட்டியில் 25-க்கும் மேற்பட்ட கலை - அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, சிலம்பப் போட்டி, மற்றும் நாட்டுப்புற கலைகள் போட்டி உள்ளிட்டவைகளில் கலந்து கொண்டனர். சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் பங்கேற்ற மாணவ - மாணவிகள் தமிழர்களின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றக்கூடிய பல்வேறு கலை நிகழ்ச்சியில் நடத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்.. வங்கி கடன் மோசடியிலும் சிபிஐ வழக்குப்பதிவில் நீதிபதி பெயர்..!

ஸ்டெல்லா மேரி கல்வியியல் கல்லூரி, ஸ்ரீவித்யா கல்வியியல் கல்லூரி, கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முறையே முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை தட்டி சென்றனர்.ஒட்டு மொத்த சாம்பியன் ஷீப் எனப்படும் நடைபெற்ற அனைத்து போட்டிகளுக்கான முதன்மை பரிசை சிவகாசி அரசு கலை _ அறிவியல் கல்லூரி தட்டி சென்றது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்போோட்டியலில் கலந்து கொண்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் விதமாக நாட்டுப்புற கலைகளை போட்டியில் நிகழ்த்தி தனியார் கல்லூரிகளுக்கு ஈடாக தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி முதல் பரிசை தட்டிச் சென்றது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் பரிசை தட்டிச் சென்ற சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் பரிசுகளை வழங்கி கௌரவப்படுத்தினார்.
இதையும் படிங்க: கூட்டு நடவடிக்கைக் குழுவில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்.. சட்டப்பேரவைகளில் தொகுதிமறுவரையறைக்கு எதிராக தீர்மானம்..!