கண்களில் காதல் வசனம் பேசும் சுந்தர் சி மற்றும் குஷ்பூ தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வந்த காலத்தில் அவர்கள் தோற்றத்தை வைத்து இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்த இருவரும் தங்கள் உடல் எடையை முற்றிலும் குறைத்து ஆளே மாறிவிட்டனர். அதிலும் அவந்திகா இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் கிளாமர் லுக்கில் மாறி அனைவரையும் வாயடைக்க செய்திருக்கிறார்.

இந்த நிலையில், சமீபகாலமாக நடிகை குஷ்பூவின் இளைய மகளின் புகைப்படங்கள் இணையத்தில் உலா வர, அவருக்கு நிறைய ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இதனை அப்படியே தக்கவைக்க நினைத்த குஷ்பூ, தனது இளைய மகளான அவந்திகாவை எப்படியாவது சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்து, பல இயக்குனர்களிடம் இதனை குறித்து தீவிரமாக பேசி வருகிறார். இப்படி இருக்க, அவந்திகா புதிய படத்தில் நடித்து வருவதாக பல தகவல்கள் வந்து கொண்டு இருக்க, குஷ்பூ இதனை குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்தார்.
இதையும் படிங்க: ட்ரெய்லரால் மிரண்டு போன ரசிகர்கள்..! 'கேங்கர்ஸ்' ரிலீசுக்காக காத்திருக்கும் மக்கள்..!

இந்த சூழலில், தான் சினிமாவில் அறிமுகமாக தயாராக இருப்பதாக குஷ்பூ மகள் அவந்திகா கூறியுள்ளார். என்னவெனில், "எனது பெற்றோர்கள் எனக்கான பாதையை நானே தீர்மானித்துக் கொள்ள முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். சினிமாவில் நடிப்பது என்பது எனது தனிப்பட்ட விருப்பம். இதனை நான் அம்மாவிடம் சொன்னபோது 'எதைச் செய்தாலும் அதில் சிறப்பாக செய்' என்று மட்டும் சொன்னார். சில வருடங்களுக்கு முன்பு லண்டனில் படித்து முடித்துவிட்டு இந்தியா திரும்பும் நேரத்தில் கொரோனா வந்துவிட்டது.

இதனால் அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம். அப்போதுதான் அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்து நடிப்பது தான் சரியாக இருக்கும் என முடிவு செய்தேன். அங்கிருந்த காலகட்டத்தில் இதற்காகவே எனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து ஸ்லிம் ஆனேன். கொரோனா காலம் முடிந்ததும் வீட்டிற்கு வந்த நான் மீண்டும் லண்டன் சென்று சினிமா தொடர்பான படிப்புகளை படித்தேன். இப்போது சினிமாவை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட நான் அதற்காக முழுமையாக என்னை தயார் செய்து கொண்டு சினிமாவுக்குல் வருகிறேன்.

நான் நடிக்க தொடங்கிய பிறகு நிச்சயம் என்னை அம்மாவோடு ஒப்பிட்டு பேசுவார்கள். இது எல்லா வாரிசுகளும் சந்திக்கிற ஒரு விஷயம் தான், அதை நானும் சந்திப்பேன் என எனக்கு நன்றாக தெரியும். கண்டிப்பாக என் அம்மா அளவிற்கு என்னால் சாதிக்க முடியாவிட்டாலும் அவர் பெயரை சினிமாவின் மூலம் காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கிறது.

மேலும், அப்பாவிடம் இருந்து அவருடைய உழைப்பையும் சுறுசுறுப்பையும் அதிகமாக கற்றுக் கொண்டிருக்கிறேன் அதுவும் எனக்கு உதவும். இப்போது தீவிரமாக கதை கேட்டு வருகிறேன். இந்த வருடத்திற்குள் நான் நடிக்கும் படத்தைப் பற்றிய அறிவிப்புகள் உங்களுக்கு வரும். காத்திருங்கள் என அவந்திகா கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: "மூக்குத்தி அம்மன் 2" படத்தின் மீது விழுந்த திருஷ்டி..! ஒரே பதிவில் அனைத்தையும் தவிடுபொடியாகிய குஷ்பூ..!