ஆரம்பத்தில், 2005 ஆம் வருடம் இந்தியில் வெளியான "இல் சந்த் சா ரோஷன் செஹ்ரா" என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டு "ஸ்ரீ" என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு "கேடி" என்ற தமிழ் படத்தில் தமிழில் அறிமுகமானார் தமன்னா பாட்டியா. இதனை தொடர்ந்து, சிறுத்தை, பையா, சுறா, படிக்காதவன், தில்லாலங்கடி, தோழா போன்ற படங்களில் நடித்து தனது பெயரை மக்கள் மனதில் பதிய வைத்தார்.

இப்படி, பாலிவுட் மற்றும் கோலிவுட் மார்க்கெட்டில் தமன்னா பெயர் ஒலிக்காத நாளே இல்லை. அந்த அளவுக்கு தமன்னா கால் ஷீட் கொடுக்க கூட நேரமில்லாமல் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் அளவிற்கு மாறி இருக்கிறார். சிறிது காலம் தமிழ் சினிமாவில் காணாமல் போன தமன்னா திடீரென ஜெயிலரில் "காவாலையா" பாடலில் நடனம் ஆடி மீண்டும் ட்ரெண்ட் ஆனார். இதுவரை ஹீரோக்களுடன் காதல் காட்சிகளில் மட்டுமே நடித்த தமன்னா, முதல் முறையாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாக அரண்மனை 4ல் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இதையும் படிங்க: காதல் தோல்வியில் கிழிந்த பேண்டுடன் வந்த தமன்னா...! காதல் வலியை இப்படியும் அனுபவிக்கலாமா..!

அதுமட்டுமல்லாமல், இதுவரை முத்த காட்சிகள் மற்றும் மிகுந்த ரொமன்ஸ் காட்சிகளில் நடிக்காத தமன்னா,"ஜீ கர்டா" என்ற ஓடிடி தொடரில் குறைந்த அளவிலான ஆபாச காட்சிகளில் நடித்து இருந்தார்.

இதனால் ரசிகர்களின் வசை சொல்லுக்கு ஆளான தமன்னா, அடுத்தடுத்த படங்களின் கதாபாத்திர தேர்வினால் தனது ரசிகர்களை காத்து கொள்ள முடிவு செய்து, யுவா, நாக மகேஷ், வம்சி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி, ஹெபா பட்டேல், வசிஷ்ட என். சிம்ஹா ஆகியோருடன் இணைந்து தமன்னா பாட்டியா "ஒடெலா 2" என்ற படத்தில் மிகவும் பயங்கரமான மந்திரவாதியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லரை பிப்ரவரி 22ம் தேதி கும்பமேளாவில் வைத்து வெளியிட்டனர் படக்குழுவினர்.

இவரது சிறந்த படங்களாக பார்த்தால், எனக்கு 20 உனக்கு 18, வியாபாரி, அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி, கோ, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, தேவி, கத்திச்சண்டை, தர்மதுரை, தோழா, பாகுபலி 2, கே ஜி எஃப் (சேப்டர் 1), ஸ்கெட்ச், சயீரா நரசிம்ம ரெட்டி, கண்ணே கலைமானே, ஆக்ஷன், பெட்ரோமாக்ஸ், தேவி 2, ஜெயிலர், அரண்மனை 4 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை தமன்னா காதலித்து வந்த விஜய் வர்மாவுடன், நீண்ட காலமாக இருந்த காதல் பந்தத்தை சமீபத்தில் முறித்திருக்கிறார். அதற்கு உதாரணமாக, சமீபத்தில் தமன்னா போட்ட பதிவே சாட்சி, அதில், "வாழ்க்கையில் அற்புதங்கள் என்பது அதுவாகவே நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது. நாம்தான் அற்புதங்களை உருவாக்கிக்கொள்ள பழக வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை பார்த்தே ரசிகர்கள் இவர்களது பிரிவை உறுதி செய்தனர். இப்படி இருக்க தனது காதல் தோல்விகளை மறக்க தற்பொழுது தமன்னா அழகிய ஆடைகளில் போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை இணையத்தில் பதிவிட்டு, ரசிகர்களை மகிழ்ச்சியாக வைப்பதுடன் தனது மனதையும் ஆசுவாசப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: கால்ஷீட் கொடுக்காத ஹீரோயின்.. பின் வந்தவர் தான் தமன்னா.."பையா" இயக்குநர் ஹார்ட் டச் ஸ்பீச்..!