×
 

வீர தீர சூரனாய் மீண்டு வந்த விக்ரம் படம்....! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்...!

ஐகோர்ட் தடைகள் நீங்கி மீண்டும் வெளியாகிறது விக்ரமின் வீர தீர சூரன் படம்.

1990ம் ஆண்டு "மீரா" என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் நடிகர் விக்ரம். ஆனால், அப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக ஓடவில்லை என்றாலும் விக்ரம் தொடர்ந்து வந்த வாய்ப்புகளை விடாமல்  நடித்து வந்தார். அதன் பின், 1999ம் ஆண்டு "சேது" என்ற படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் அவருக்கு நல்ல வெற்றியை தேடித்தந்தது.

இதனை தொடர்ந்து, 2001ம் ஆண்டு "தில்" திரைப்படம் வெளியாகி 100கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றிப்படமாக அமைந்தது. பின் மூன்றாவதாக விக்ரம் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான "ஜெமினி" பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

அதன் பின் 2005ம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான 'அந்நியன்' திரைப்படத்தில் நடித்த விக்ரமின் கேரக்டர் மக்களுக்கு பிடித்து போக அப்படம் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து, அப்படத்தில் நடித்ததற்காக, பிலிம்பேர் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் விக்ரம்.

இதையும் படிங்க: எல்2:எம்பூரான் வெளியான நேரத்தில் காலியான 'வீர தீர சூரன் 2'..! ஒரே வழக்கில் படத்தை முடித்த நிறுவனம்..!

இதுவரை, என் காதல் கண்மணி, தந்து விட்டேன் என்னை, மீரா, புதிய மன்னர்கள், உல்லாசம், கண்களின் வார்த்தைகள், ஹவுஸ் புல், விண்ணுக்கும் மண்ணுக்கும், காசி, சாமுராய், கிங், சாமி, காதல் சடுகுடு, பிதாமகன், தூள், அருள், மஜா, பீமா, கந்தசாமி, மதராசப்பட்டினம், ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, மெரினா, தாண்டவம், டேவிட், 10 என்றதுக்குள்ள, ஐ, இருமுகன், சாமி 2 ஸ்கெட்ச், கடராம் கொண்டான், கந்தசாமி, மதராசப்பட்டினம், ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, மெரினா, தாண்டவம், டேவிட், 10 என்றதுக்குள்ள, ஐ, இரு முகன், சாமி 2, ஸ்கெட்ச், கடாரம் கொண்டான், சூரியபுத்ர மகாவீர் கர்ணா, மகான், பொன்னியின் செல்வன் (PS 1), கோப்ரா, பொன்னியின் செல்வன் 2, தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோருடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் 'காளி' என்ற பெயரில் விக்ரம் நடித்து இருக்கும் படம் தான் "வீர தீர சூரன்". இப்படம் இன்று காலை வெளியாக இருந்த வேளையில் ஐகோர்ட் இப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதித்தது.

அதாவது, "வீர தீர சூரன்" படத்தின் தயாரிப்பு நிறுவனமான "பி4» நிறுவனம்" இப்படம் தயாரிக்க நிதியுதவி வழங்கியுள்ளது. அதற்காக இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அந்நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் கொடுத்துள்ளார்.

இருப்பினும் படத்தின் டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்கப்படவில்லை என்றாலும் பரவாயில்லை என கூறி தயாரிப்பாளர் படத்தை வெளியிட முன்வந்தால், படத்தை ஓ.டி.டி.யில் விற்க முடியவில்லை என்று பி4யு நிறுவனம் கூறி, டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கானது இன்று காலை விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில், "வீர தீர சூரன் படக்குழு உடனடியாக ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் படத்தின் ஓ.டி.டி உரிமம் விற்கப்படும் முன் ரிலீஸ் தேதியை வெளியிட்டதால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் உத்தரவிடபட்டது.

இதனால் மனமுடைந்து போன ரசிகர்களின் மனதை குளிர வைக்கும் வகையில் இப்படத்தின் இயக்குனர் அருண் குமார் வெளியிட்டு உள்ள பதிவு தற்பொழுது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து உள்ளது. அதன்படி, ‛‛வீர தீர சூரன்" படம் இன்று(மார்ச் 27) மாலை முதல் தியேட்டர்களில் வெளியாகிறது என்றும் என் தந்தையே காலையில் முன்று முறை இந்த படத்திற்கு டிக்கெட் வாங்க சென்று படம் வெளியாகவில்லை என திரும்பி வந்துவிட்டார்.

அதேமாதிரி விக்ரம் ரசிகர்களும், பொது மக்களும் எவ்வளவு இன்னல்களை சந்தித்து இருப்பார்கள் என எனக்கு புரிகிறது. எல்லோரிடமும் படக்குழு சார்பாக மன்னிப்பு கேட்கிறேன். இந்த பிரச்னையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் எனது திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி'' என தெரிவித்து உள்ளார். 

இதனைப் பார்த்த விக்ரம் ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி விரைந்து உள்ளனர்.

இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்துக் கோரி மனு.. மனமுவந்து பிரிவதாக நீதிமன்றத்தில் விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share