எல்2:எம்பூரான் வெளியான நேரத்தில் காலியான 'வீர தீர சூரன் 2'..! ஒரே வழக்கில் படத்தை முடித்த நிறுவனம்..!
நடிகர் விக்ரம் படம் வெளியாகும் சமயத்தில் ஐகோர்ட் படத்தை வெளியிட தடை செய்துள்ளது அதிரசகியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் நடித்த படத்தில் "எம்.மாசிலாமணி என்னும் நான்.. என்று பதவி பிரமாணம் செய்யும் பொழுதே விஜய் கோர்ட்டில் கேஸ் போட்டு பதவியை காலி செய்தது போல" நடிகர் விக்ரம் நடித்த படத்தை இன்று ஒருவர் காலி செய்திருக்கிறார். குறிப்பிட்ட சில காலங்களுக்குப்பின்னர் நடிகர் விக்ரம் நடித்த படங்கள் அனைத்தும் தற்பொழுது வரை ஹிட் படங்களாகவே இருக்கிறது.
குறிப்பாக சங்கர் இயக்கத்தில் அவர் நடித்த அந்நியன் திரைப்படத்தை யாராலும் மறைக்க முடியாது. அதில், அம்பி கேரக்டரில் சாதுவாகவும், ரெமோ கேரக்டரில் காதல் மன்னனாகவும், அந்நியன் கேரக்டரில் நியாமான கொலையாளியாகவும் நடித்து அசத்தி இருப்பார். அதிலும் பிரகாஷ்ராஜ் விக்ரமை பார்த்து "நான் சிவாஜியை பார்த்து இருக்கேன்...எம்ஜிஆரை பார்த்து இருக்கேன்...ஆனால் உன்னை போல ஒரு நடிகனை பார்த்ததில்லை" என கூற திரையரங்கமே அதிர்ந்தது.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராய்க்கு ஆக்சிடண்டா...! அவருக்கே ஷாக் கொடுத்த இணையவாசிகள்..!
அப்படி "நடிப்பின் அரக்கனாக" வலம் வருபவர் தான் நடிகர் விக்ரம், 1990ம் ஆண்டு "மீரா" என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். ஆனால் அப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக ஓடவில்லை என்றாலும் விக்ரம் தொடர்ந்து வந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு நடித்து வந்தார். அதன் பின், 1999ம் ஆண்டு "சேது" என்ற படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் அவருக்கு நல்ல வெற்றியை தேடித்தந்தது. இதனை தொடர்ந்து, 2001ம் ஆண்டு "தில்" திரைப்படம் வெளியாகி 100கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றிப்படமாக அமைந்தது. பின் மூன்றாவதாக விக்ரம் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான "ஜெமினி" பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அதன் பின் 2005ம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான 'அந்நியன்' திரைப்படத்தில் நடித்த விக்ரமின் கேரக்டர் மக்களுக்கு பிடித்து போக அப்படம் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து, அப்படத்தில் நடித்ததற்காக, பிலிம்பேர் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் விக்ரம்.
இதுவரை, என் காதல் கண்மணி, தந்து விட்டேன் என்னை, மீரா, புதிய மன்னர்கள், உல்லாசம், கண்களின் வார்த்தைகள், ஹவுஸ் புல், விண்ணுக்கும் மண்ணுக்கும், காசி, சாமுராய், கிங், சாமி, காதல் சடுகுடு, பிதாமகன், தூள், அருள், மஜா, பீமா, கந்தசாமி, மதராசப்பட்டினம், ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, மெரினா, தாண்டவம், டேவிட், 10 என்றதுக்குள்ள, ஐ, இரு முகன், சாமி 2, ஸ்கெட்ச், கடாரம் கொண்டான், சூரியபுத்ர மகாவீர் கர்ணா, மகான், பொன்னியின் செல்வன் (PS 1), கோப்ரா, பொன்னியின் செல்வன் 2, தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
இத்தனை படங்களில் நடித்து உள்ள விக்ரமின் கெரியரில் இதுவரை அவரது படங்கள் வெளியாகும் நேரத்தில் எந்த வித தடைகளோ தடுங்களோ வந்ததில்லை. ஆனால், தற்பொழுது வந்துள்ளது. அதன்படி, இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோருடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் 'காளி' என்ற பெயரில் விக்ரம் நடித்து இருக்கும் படம் தான் "வீர தீர சூரன்". இப்படம் இன்று வெளியாக இருந்த வேளையில் ஐகோர்ட் இப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதித்துள்ளது.
அதாவது, "வீர தீர சூரன்" படத்தின் தயாரிப்பு நிறுவனமான "பி4யு நிறுவனம்" இப்படம் தயாரிக்க நிதியுதவி வழங்கியுள்ளது. அதற்காக இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அந்நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் கொடுத்துள்ளார். இருப்பினும் படத்தின் டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்கப்படவில்லை என்றாலும் பரவாயில்லை என கூறி தயாரிப்பாளர் படத்தை வெளியிட முன்வந்தால், படத்தை ஓ.டி.டி.யில் விற்க முடியவில்லை என்று பி4யு நிறுவனம் கூறி, டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கானது இன்று காலை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், "வீர தீர சூரன் படக்குழு உடனடியாக ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் படத்தின் ஓ.டி.டி உரிமம் விற்கப்படும் முன் ரிலீஸ் தேதியை வெளியிட்டதால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் உத்தரவிடபட்டுள்ளது.
இதனால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதுடன் படம் வெளியாகும் நாட்கள் நான்கு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களது பிரச்சனையில் படத்தை காண ஆவலாக இருந்த ரசிகர்கள் தற்பொழுது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: "மூக்குத்தி அம்மன் 2" படத்தின் மீது விழுந்த திருஷ்டி..! ஒரே பதிவில் அனைத்தையும் தவிடுபொடியாகிய குஷ்பூ..!