சிவப்பு உடையில் ஜொலிக்கும் திவ்யபாரதி..! அழகின் மொத்த உருவமாய் மாறி அசத்தல்..!
நடிகை திவ்யபாரதி சிங்கிள் போட்டோ ஷுட் காட்சிகள் இணையத்தில் வைரல்.
தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு முன்பு, மாடலாக இருந்த திவ்ய பாரதி, 2015ம் ஆண்டில் "மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ்" பட்டத்தையும், அதே ஆண்டில் "பிரபலமான புதிய முகம் மாடல் என்ற பட்டத்தையும் வென்றார். பின்னர் 2016ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற அழகி போட்டியில் 'பிரின்சஸ் ஆஃப் கோயம்புத்தூர் 2016' என்ற பட்டத்தைப் பெற்றார்.
இதனை தொடர்ந்து, மாடலிங்கில் பல்வேறு வாய்ப்புகள் திவ்யபாரதிக்கு கிடைக்க, பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பின் 2021ம் ஆண்டு வெளியான "பேச்சிலர்" திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார். இதனால் இப்படத்தில் நடித்தமைக்காக "எடிசன் விருதுகள் 2022 இல், அவர் ரைசிங் ஸ்டார் ஃபிமேல் விருதையும்" பெற்றார்.
இதையும் படிங்க: ஜிவி பிரகாஷின் குடும்ப சண்டைக்கு காரணம் இவங்க தான்.. நெட்டிசன்கள் போட்ட பதிவு.. முற்றுப்புள்ளி வைத்த நடிகை..!
இதனை அடுத்து, தற்பொழுது வெளியான யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலருடன் நடிகை திவ்யபாரதியும் இணைந்து நடித்துள்ள இந்தியாவின் முதல் கடல் சார்ந்த பேய் படம் தான் 'கிங்ஸ்டன்'.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திவ்யபாரதி, இந்த படத்தின் கதையை இயக்குநர் கமல் தன்னிடம் சொன்னபோது ஒரு லுக் அவுட் வீடியோவையும் காண்பித்தார் அதை பார்த்த உடனே இப்படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டேன் இதனால் முதல்முறையாக நான் ஸ்டன்ட் காட்சியில் நடித்துள்ளேன் என கூறியிருந்தார்.
பேச்சிலர் படத்தை தொடர்ந்து இப்படத்திலும் ஜீவியுடன் இவர் இணைந்து நடித்துள்ளதால் ஜீவிக்கும் திவ்யபாரதிக்கும் இடையே நெருக்கமான உறவு உள்ளது என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதனை அறிந்த திவ்ய பாரதி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டார். அதில், "எனக்கு எந்தத் தொடர்பும் இல்லாத தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் என் பெயர் இழுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.யின் குடும்பப் பிரச்சினைகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
வெளிப்படையாகச் சொன்னால், நான் ஒரு நடிகரை ஒருபோதும் டேட் செய்ய மாட்டேன், நிச்சயமாக ஒரு திருமணமான ஆணுடன் டேட்டிங் செய்ய மாட்டேன். ஆதாரமற்ற வதந்திகள் என் கவனத்தை ஈர்க்கத் தேவையில்லை என்று நம்பி நான் இதுவரை அமைதியாக இருந்தேன்.
இருப்பினும், இது ஒரு எல்லையைத் தாண்டியது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண், நான் வதந்திகளால் சோர்ந்து போகமாட்டேன். எதிர்மறையைப் பரப்புவதற்குப் பதிலாக, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். எனது எல்லைகளை மதிக்கவும். இந்த விஷயத்தில் இது எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை" என கூறி இருக்கிறார்.
இப்படி ஜீவி பிரகாஷ் விவாகரத்து பழியை ஏற்று வரும் திவ்ய பாரதி, தனது இன்ஸ்ட்டாவில் சிவப்பு சேலை புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் மனதை சுக்குநூறாய் உடைத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: என்ன இப்படி பண்ணிட்டீங்களே டைரக்டரு.. கிங்ஸ்டன் படம் பார்த்தவர்களை கதிகலங்க வைத்த படக்குழு..!