கோவில் நிர்வாகத்தை குற்றம் சாட்டிய மோகன்லால்...! "மம்முட்டி பூஜை ரசிது" குறித்து பதிலடி கொடுத்த கோவில் நிர்வாகம்...!
மம்முட்டி பூஜை ரசிது வெளியான விவகாரத்தில் மோகன்லாலுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
மம்மூட்டியின் உண்மையான பெயர் 'முகமது குட்டி இஸ்மாயில் பனிபரம்பில்'. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழி சார்ந்த 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மம்முட்டி. இப்படி இருக்க, 73 வயதான மம்மூட்டி தற்போது, மகேஷ் நாராயணன் இயக்கி வரும் "MMMN" என்ற திரைப்படத்தில் நடித்து வரும் மம்முட்டி படப்பிடிப்பில் இருந்து தற்பொழுது இடைவெளி எடுத்துள்ளார்.
இதனை அறிந்த ரசிகர்கள், மம்முட்டிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் கண்டிப்பாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.
இதனை பார்த்த "MMMN" படக்குழுவினர் சமீபத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். அதன்படி "மம்மூட்டி கடவுள் பக்தி உள்ளவர் என்பதால் தற்பொழுது ரமலான் நோம்பு கடைபிடித்து வருகிறார். இதனால், படப்பிடிப்பில் இருந்து அவருக்கு சிறிது நாள் விடுப்பு வழங்கி இருக்கிறோம். கண்டிப்பாக, அவர் திரும்பி வருவார் எந்த பாதிப்பும் அவருக்கு இல்லை. நோம்பு முடிந்த பின் மம்மூட்டி மோகன்லாலுடன் இணையவுள்ளார்" என தெரிவித்து இருந்தனர்.
இதையும் படிங்க: "படம் பக்கா மாஸ்".. சொன்னதை செஞ்சிட்டாரு பிரித்விராஜ்..! `எல் 2: எம்பூரான்' படத்திற்கு குவியும் பாராட்டு...!
படக்குழுவினர் கூறியதை நம்பி ரசிகர்கள் அமைதியாக இருந்த வேளையில், இருமுடி கட்டி, பம்பா கணபதி கோயிலில் பாதபடியாக மலையேறி சபரிமலை சென்ற நடிகர் மோகன்லால், சமீபத்தில் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தார்.
எதற்காக திடீர் தரிசனம் என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தற்பொழுது அதிக பட்ஜெட்டில் தயாரான 'எல்2எம்புரான்' திரைப்படம் வரும் 27-ம் தேதி ரிலீசாவதை முன்னிட்டு மோகன்லால் சபரிமலையில் சுவாமி தரிசனம் நடத்தியதாக அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டது. அவர் வேண்டுதலுக்கு ஏற்ப தற்பொழுது படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் விஷயமே அங்கு இல்லை மறைமுகமாக, நடிகர் மம்முட்டி பெயரில் வழிபாடு நடத்தி இருந்தார் மோகன்லால் என்ற செய்தி காட்டுத்தீயார் பரவியது. அதற்கு ஆதாரமாக ரசீதும் வெளியாகி அனைவரையும் குழப்பமடைய செய்தது. அந்த ரசீதில் நடிகர் மம்முட்டியின் இயற்பெயரான 'முஹம்மது குட்டி' என்ற பெயர் இடம் பெற்றதுடன் சிறப்பு பூஜையாக "உஷ பூஜை வழிபாடு" எனவும் வழிபாட்டுக்கு ரூ.1500 கட்டணம் கட்டி இருப்பது குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனால் மம்முட்டிக்கு ஏதோ ஆகி உள்ளது அனைவரும் மறைக்கிறார்கள் என்ற பேச்சு ஒருபக்கம் எழுந்தாலும், கோவில் ரசீதை வெளியிட்டது கோவில் நிர்வாகமா? அல்லது வெளியாட்களா.? என்ற பிரச்சனையை ரசிகர்கள் கிளப்ப, அதற்கு ஏற்றார் போல் 'எம்புரான்' பட புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த மோகன்லாலும், மம்முட்டிக்காக சபரிமலையில் நான் பூஜை செய்ததில் என்ன தவறு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நண்பனுக்காக வேண்டிக்கொண்ட தகவலை வெளியிடத் தேவையில்லை, அது தனிப்பட்ட விஷயம். ஆனால் இந்த தகவலை திருவிதாங்கூர் தேவசம் போர்டை சேர்ந்தவர்கள் தான் வெளியிட்டனர் என்று ஆதங்கமாக கூறினார்.
இதனால் ரசிகர்கள் கோவில் நிர்வாகத்தினரை திட்டி தீர்க்க, தற்பொழுது இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர்கள். அதன்படி, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலையில் பூஜை நடத்தும்போது அதற்கான அசல் ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும். 'முகம்மது குட்டி' என்ற பெயரில் மோகன்லாலுக்காக பூஜை நடத்திய நபரிடம் அசல் ரசீது கொடுக்கப்பட்டது.
அந்த ரசீது தான் பத்திரிகைகளில் வெளியானது. தேவசம் போர்டை சேர்ந்த யாரும் இந்த ரசீதை வெளியிடவில்லை. மோகன்லால் இதை தவறாக புரிந்து கொண்டுள்ளார். அவர் உண்மையை புரிந்து கொண்டு தனது நிலைப்பாட்டை திருத்தி கொள்வார் என்று கருதுகிறோம். என்று அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: ரிலீசுக்கு தயார் நிலையில் 'எல் 2: எம்பூரான்'..! வெளியாகும் முன்னே வசூலில் உலக சாதனை..!