நடிகர் அஜித் குறித்து அட்டகாசமான பதிவு.. அப்படி என்ன சொல்லியிருக்காங்க பிரியா வாரியர்..?
நடிகர் அஜித்தை குறித்தும் அவரது குணத்தை குறித்தும் தெளிவாக பதிவிட்டு இருக்கிறார் நடிகை பிரியா வாரியர்.
நடிகர் அஜித்தின் 63வது திரைப்படம் தான் ‛குட் பேட் அக்லி'. இந்த திரைப்டத்தை இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, பிரியா பிரகாஷ் வாரியார், ரகுராம் உள்பட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து அசத்தியுள்ளார்.
இந்த படத்தில் பழைய பாடல்களை வைத்து நடனம் ஆடுவது சண்டைபோடுவது போன்ற காட்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. முக்கியமாக "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடியிருப்பார் அர்ஜுன் தாஸ். அதுமட்டுமல்லாமல் த்ரிஷா குரலில் "உங்களுடன் நூறு வருடம் வாழனும்" என போனில் ஒருவர் பேச, அது ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் வந்த தனது மனைவியின் குரல் என்பதை உணர்ந்த அஜித், "எந்த மனைவி டா கட்டின புருஷனுடன் நூறு வருடம் வாழனும் என சொல்லுவார்" என சொல்ல, தியேட்டரில் விசில் பறந்தது. இறுதியில் படத்தில் சண்டை காட்சிகளில் "ஆளுமா டோலுமா" பாடலை வைத்து சண்டையிடுவது அமோகமாக இருந்தது.
இதையும் படிங்க: தரையில் உட்கார்ந்து படம் பார்த்த இயக்குநர்.. வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்!!
இப்படிப்பட்ட படத்தை குறித்து வெளிநாட்டு தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக இருக்கும் உமைர் சந்து குறிப்பிடுகையில், "குட் பேட் அக்லி திரைப்படம் ஸ்டார் பவராக உள்ளது. ஸ்டைல், சண்டை, உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் ஆச்சரியமளிக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அஜித் குமார் மீண்டும் பழிவாங்கும் அவதாரத்தில் நடித்துள்ளார். விறுவிறுப்பான திரைக்கதை, குறிப்பாக கிளைமேக்ஸ் என்பது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இருக்கும்'' என்று கூறியுள்ளார். அதேடு குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு அவர் 4 ஸ்டார்களை வழங்கி உள்ளார்.
மேலும், ‛‛அஜித் குமாருக்கு ஹேட்ஸ்ஆஃப். நீங்கள் எப்போதும் தடைகளை உடைத்து கிளாசியான திரில்லர் படத்தை கொடுக்கிறீர்கள். என்ன மாதிரியான கிரேஸி ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் இது. அனைவரும் வெறிப்பிடித்தது போல் நடித்துள்ளனர். அஜித்குமார் ஒன்மேன் ஷோவாக இருக்கிறார். கிளைமேக்ஸ் மற்றும் இண்டர்வெல் பிளாக்ஸ் சூப்பராக உள்ளது. பிஜிஎம் அருமையாக இருக்கிறது. கதை மற்றும் திரைக்கதை என்பது சுவாரசியமானதாக இருப்பதோடு நகைச்சுவையோடும் உள்ளது. படத்தின் வசனங்கள் கைத்தட்டுகளை குவிக்கும் வகையில் உள்ளது. ரசிகர்கள் அஜித் குமாரின் புதிய அவதாரத்தை ரசிப்பார்கள்" என தெரிவித்திருந்தார். அவரை போல ரசிகர்களும் படத்தில் சம்பவம் இல்லை சம்பவம் தான் படமே என தெரிவித்து இறுகின்றனர்.
இப்படி படத்தை குறித்தும் அதில் நடிகர் அஜித்தின் நடிப்பு குறித்தும் பலர் பெருமையாக கூறிவரும் நிலையில், அஜித்துடன் குட் பேட் அக்லீ படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பெருமையாக பதிவிட்டு இருக்கிறார் நடிகை பிரியா வாரியார். அதில், இதை நீண்ட காலமாக சொல்ல காத்திருந்தேன். உங்கள் மீது எனக்கு இருக்கும் மரியாதையை எந்த அளவுக்கு வார்த்தைகளால் எழுதினாலும் போதாது.முதல் முறை பேசியது தொடங்கி கடைசி நாள் ஷூட்டிங் வரை நன்றாக உணர வைத்தீர்கள். யாரும் வேறு விதமாக உணரக்கூடாது என உறுதி செய்தீர்கள். செட்டில் நீங்கள் இருக்கும் போது அனைவரையும் பார்த்துக் கொண்டீர்கள்.
Cruise கப்பலில் பயணித்த போது நாம் ஒன்றாக சாப்பிட்ட உணவு, அடித்த ஜோக்குகள், அனைத்தும் மிக சிறப்பாக இருந்தது. உங்களை போல ஒருவரை நான் பார்த்தது இல்லை. கார், குடும்பம், பயணம் செய்வது, ரேசிங் போன்ற விஷயங்களை பற்றி பேசும்போது உங்கள் கண்கள் மாறும் விதம் அப்படி இருக்கும். உங்களை சுற்றி இருக்கும் நபர்களை பார்த்து கவனித்து அவர்களை பாராட்டுவீர்கள். உங்களது பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு தான் என்னை போன்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது.
இதை இன்னும் பல ஆண்டுகளுக்கு நான் எடுத்துச் செல்வேன். எவ்வளவு உயரத்திற்கு போனாலும் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை தான் உங்களை பார்த்து கற்றுக் கொண்டேன். அஜித் சார் உங்களுடன் குட் பேட் அக்லீ படத்தில் நடித்த அனுபவத்தை நான் எப்போதும் மறக்க மாட்டேன். உங்களுடன் நடிக்க கிடைத்த வாய்ப்புக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன் என பதிவிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் இதுதான் ஏகே, அவருடைய குணத்தை தெளிவாக தெரிவித்துள்ளார் பிரியா வாரியார் என கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: படம் வெறித்தனமா இருக்கு.. முதல் ரிவியூவில் பாசிட்டிவ் கமெண்ட் வாங்கிய "குட் பேட் அக்லி"...!