×
 

அஷ்வத் மாரிமுத்து நம்பியதால் நல்லா மாட்டிக்கிட்டேன்.. கயாடு லோஹர் போட்ட ஒற்றை பதிவு..!

அஷ்வத் மாரிமுத்து நம்பியதால் தான் தற்பொழுது வசமாக மாட்டிக்கொண்டதாக நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

டிராகன் திரைப்படம் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படி ஒரு படம் நாங்கள் பார்த்தே இல்லை இப்படம் மிகவும் அற்புதமாக உள்ளது என பலரும் தங்களது விமர்சனத்தை பகிர்ந்து வருகினர். அதுமட்டுமல்லாமல் இதுவரை ஓடிடியில் கூட வெளியிட முடியாமல் தியேட்டர்களில் பாக்ஸ் ஆபிஸையும் கடந்து வெற்றி கரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது டிராகன் படம்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹைதராபாத்தில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து அனைவருக்கும் நன்றி சொன்னதோடு, தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு இப்படத்தை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவரை போல பிரதீப் ரங்கநாதன் பேசும் பொழுது, லவ் டுடே படத்திற்கு என்னுடன் நடிக்க பல ஹீரோயினிடம் கேட்டேன் ஆனால் ஒருவரும் என்னுடன் நடிக்க தயாராக இல்லை. ஆனால் இப்படத்தில் என்னுடன் நடிக்க ஒப்புக்கொண்ட அனுபமா பரமேஸ்வரனுக்கும், கயாடு லோஹர் இருவருக்கும் நன்றி தெரிவித்தார். 

இவர்களை தொடர்ந்து, நடிகை கயாடு லோஹர் ஏற்கனவே தனது "எக்ஸ் தள" பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார் அதில் "எனக்கு எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. தனக்கும் டிராகன் படத்திற்கும் அதில் வரும் பல்லவி கதாபாத்திரத்தீர்க்கும் கிடைக்கும் வரவேற்பு இதுவரை எங்கும் கிடைக்காத ஒன்று.

இப்படத்தை திரையரங்கில் பார்க்கும் ரசிகர்கள் எனக்கு அடிக்கும் விசிலாகட்டும். இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதெயெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் தமிழ்ப்பொண்ணும் இல்லை. எனக்கு தமிழும் சரியாக பேசவராது. ஆனால், நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு விலைமதிக்காதது. இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி உங்களுக்கு தருவேன்" எனகூறி தனது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தார்.

இதையும் படிங்க: ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை கயாடு லோஹர்... தமிழில் வரிசை கட்டும் படங்கள்.!

இப்படி பக்கம்...பக்கமாக பேசியவர் அதற்கு பின் தனியார் கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உற்சாகத்தில் பேசி சர்ச்சையில் சிக்கினார். அந்த வகையில் "உங்களுடைய Celebrity Crush யார்" என மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கயாடு லோஹர், "தளபதி விஜய் தான் என்னுடைய Celebrity Crush என்றும் 'விஜய் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் சமந்தாவுடன் நடித்த "தெறி தான்" என்றும் கூறி இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் தனக்கு பிடித்த ஹீரோ "தனுஷ் தான் எனக்கு பிடிக்கும், வேறு யாருக்கும் என் மனதில் இடமில்லை" என கூறி இருந்தார். இந்த இரண்டு பதிவையும் எடுத்து வைத்து கயாடுவை கேள்வி மழையால் கலங்கடித்தனர். 

இதனை அடுத்து, தமிழில் கயாடு அடுத்த படமாக 'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரீத்தி முகுந்தன். கயாடு லோஹர், நட்டி, ரக்ஷன், பிரக்யா, ஏஞ்சலின் மற்றும் யஷாஸ்ரீ ஆகியோருடன் நடித்து வருகிறார். 

இந்த நிலையில், கயாடு தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள பதிவுக்கு பலரிடம் இருந்தும் பாராட்டை பெற்று வருகிறார். அவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பதிவு செய்து இருக்கிறார். அதன் கீழ், "முதலில் ஜூம் கால் மூலமாக 'அஷ்வத் மாரிமுத்து' எனக்கு கதை சொல்லும்போது "கீர்த்தி" என்ற ரோலுக்காக தான் பேசியிருந்தார். இப்படி ஒரு படத்தில் நடிக்க போகிறேன் என்று மிகவும் ஆவலுடன் இருந்தேன்.

ஆனால் அதன் பிறகு அஷ்வத்திடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை என்பதால் சோர்ந்து போனேன். அதுமட்டுமல்லாமல் படம் என் கையை விட்டு போய்விட்டது என நினைத்தேன். ஆனால் ஒரு மாதம் கழித்து திடீரென என்னை அழைத்த அஷ்வத் "பல்லவி" என்ற புதிய ரோல் பற்றி கூறினார். இது இரண்டு ஹீரோயின் உள்ள கதை என யோசிக்கவேண்டாம், கண்டிப்பாக படம் வெளியாகும் பொழுது மக்களுக்கு உன்னை பிடிக்கும். அந்த வகையில் தான் உன்னை காட்டுவேன் என கூறினார்.

சரி, என அஷ்வத் வார்த்தையை நம்பி நடிக்க ஒப்புக்கொண்டேன். அவர் சொன்ன மாறியே என்னை மக்களுக்கு பிடிக்க வைத்திருக்கிறார். கொடுத்த வாக்கை காப்பாற்றியதற்கு நன்றி அஸ்வந்த் மாரிமுத்து. எனக்கு சிறந்த ஒரு அறிமுக படத்தை கொடுத்தீர்கள். உங்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

மேலும், பிரதீப் மாதிரி உண்மையான நண்பரை வாழ்க்கையில் பார்க்க முடியாது. உங்கள் இயக்கத்தில் நடிக்க மீண்டும் காத்திருக்கிறேன் எனவும் தற்போது டிராகன் படம் தனது வாழ்க்கையை மாற்றிவிட்டது. என்னை நடிக்க வைத்து தமிழ் மக்களின் அன்பை பெற்று கொடுத்து வசமாக சிக்க வைத்து விட்டார் அஸ்வந்த் மாரிமுத்து, கண்டிப்பாக உங்கள் அன்புக்கு பிரதிபலனாக படங்களில் நடிப்பேன் என தெரிவித்து இருக்கிறார். 

இனி உங்கள் வாழ்க்கை எங்கு செல்லும் என்பது உங்கள் கையில் தான் கயாடு, கண்டிப்பாக உங்கள் உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் கவலை வேண்டாம் என நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். 

இதையும் படிங்க: தனுஷ் இல்ல விஜய் தான் பிடிக்கும்.. சர்ச்சையில் சிக்கிய புது நடிகை... ஆத்திரத்தில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share