×
 

ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் "டெஸ்ட்"..! "யாரும் கண்டுகொள்ளவில்லை".. நடிகர் மாதவன் வருத்தம்..!

ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் டெஸ்ட் திரைப்பட சிறப்பு நிகழ்ச்சியில் தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் மாதவன்.

YNOT studio's தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான 'சசிகாந்த்' இயக்கத்தில், மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் முதலானோரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டெஸ்ட்.

இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் என படக்குழுவினரால் கூறப்பட்டுள்ளது.  மேலும் இப்படம் ஜெய் பீம் படத்தைப் போன்று netflix-ல் ஏப்ரல் 4-காம் தேதி, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் நடிகர் சித்தார்த் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். 

இதையும் படிங்க: சமந்தா சென்ற சோலோ ட்ரிப்...! பெண் சிங்கம் சிங்கிளாக வலம் வந்த புகைப்படம்..!

இந்தநிலையில், டெஸ்ட் படத்திற்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் நடிகர் மாதவன், சித்தார்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆனால் நடிகை நயன்தாரா மட்டும் கலந்து கொள்ளவில்லை என்பதால், அங்கு ஏன்..? நயன்தாரா நிகழ்ச்சிக்கு வரவில்லை என்ற கேள்வி எழும்பி சர்ச்சையானது. ஆனால் அவர் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் பிசியாக நடித்து வருவதால் இந்த விழாவில் கலந்து கொள்ளமுடியவில்லை என சாதுர்யமாக பதிலளித்து சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் படக்குழுவினர். 

இதனை தொடர்ந்து, படத்தில் தனது கேரக்டரை குறித்து பேசிய நடிகர் சித்தார்த், "நம் நாட்டில் கிரிக்கெட் என்பது பொழுது போக்காக இல்லாமல் வாழ்க்கையாக பார்க்கப்படுகிறது. அவர்கள் பெரும் வெற்றி நம் வெற்றியாக மாறியுள்ளது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் பெருகியுள்ளனர். அவர்கள் வரிசையில் நானும் அதில் ஒருவன் தான். நான் தினமும் கிரிக்கெட் பார்ப்பேன், பின்பு எனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவேன்.

ஆக, படத்தில் கிரிக்கெட் வீரராக டூப் வைத்து நடித்து ஒப்பேத்த முடியாது. அதேபோல் தான், 'டெஸ்ட்' திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகித்தான் இந்த கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதற்றம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். கிரிக்கெட்டில் எனக்கு பிடித்தவர்கள் என்று பார்த்தால் என்றும் 'ராகுல் டிராவிட்' தான், என கூறினார்.

அவரை தொடர்ந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நடிகர் மாதவன் தனது மனக்குமுறலை பிரமோஷன் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் பேசிய மாதவன், " 69-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த திரைப்படத்துக்கான விருது விழாவில்,  எனது 'ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தை இயக்கிடத்திற்காக தேசிய விருதை பெற்றேன். ஆனால் அதனை யாரும் பெரிதாக கொண்டாடவில்லை. தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படம் இருந்ததால், யாரும் அதை முழுமையாக உரிமை கோரவில்லை. அதற்காக எந்த விழாவும் நடத்தப்படவில்லை. முதலில் இது எனக்கு சிறிது வருத்தம் அளித்தது.

பின்னர் நான் ஏன் படம் இயக்குகிறேன் என்கிற கேள்வியை என்னிடமே கேட்டுக் கொண்டேன். என் மனதில் ஒரு கதை இருக்கிறது. அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்பதை அதற்கு பின் உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பல விமர்சன வலிகளுக்கு மத்தியில் மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்தாரா...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share