×
 

வடிவேலுவை வியக்க வைத்த இயக்குனர்..! ராட்சசி ஸ்டைலில் 3 உதாரணம் கூறி அசத்திய சுந்தர் சி..!  

மூன்று வகையான இயக்குனர்கள் உள்ளனர் என கூறி அதற்கு விளக்கம் கொடுத்து அசத்தி இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. 

தமிழ் திரையுலகில் கே.எஸ் ரவிக்குமார், சங்கர், அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன், பா.ரஞ்சித், மணிரத்தினம், பாலா, வெற்றிமாறன் என பல இயக்குனர்கள் இருந்தாலும் 90ஸ் கிட்ஸ்களை கடந்து 2கே கிட்ஸ்கள் வரை புகழ்ந்து தள்ளும் ஒரே இயக்குனர் என்றால் அவர்தான் இயக்குனர் "சுந்தர் சி". இவர் படத்தை இயக்குவது மட்டுமல்ல நடிப்பதிலும் வல்லவர். ஆதலால் அவருக்கு இப்பொழுதும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். மேலும் எப்படி ராகவா லாரன்ஸ் தனக்கென ஒரு ஜானரில் பேய் படம் எடுத்தால், இவர் ஒரு ஜானரில் பேய் படம் எடுத்து வருகிறார்.  

இப்படி மக்கள் மனதில் என்றும் செல்வாக்குள்ளவராக இருக்கும் சுந்தர் சி, கடந்த 1995 ஆம் ஆண்டு அருண் விஜயை வைத்து "முறைமாமன்" என்ற திரைப்படத்தை தயாரித்து தமிழக மக்கள் மனதில் இயக்குநராக பதிந்தவர். அது மட்டுமல்லாமல் இதுவரை ரசிகர்கள் இணையத்தில் தேடித் தேடி பார்த்தாலும் கிடைக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்" என்ற சிறப்பு வசனங்களுடைய திரைப்படமான 'அருணாச்சலம்' திரைப்படத்தையும் இயக்கியவர் இவரே. 

இதையும் படிங்க: வெளியானது 'கேங்கர்ஸ்' படத்தின் ஐட்டம் சாங்..! பாடல் வரிகளில் தெறிக்கவிட்ட சுந்தர்.சி..!

இப்படி இருக்க, இதுவரை இயக்குனர் சுந்தர் சி, "முறைமாமன், அருணாச்சலம், தலைநகரம், வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, நகரம் மறுபக்கம், முரட்டுக்காளை, கலகலப்பு, அரண்மனை, மத கஜ ராஜா, ரெண்டு, லண்டன் சின்னா, தக்கத்திமிதா, கிரி, வின்னர், இன்னும் நிறைய படங்களில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து உள்ளார். தற்பொழுது இயக்குனர் சுந்தர் சி யின் இயக்கத்தில் "மூக்குத்தி அம்மன்-2" தயாராகி வரும் நிலையில், காமெடி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து "கேங்கர்ஸ்" என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். 

இந்நிலையில், கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இதனை அடுத்து, "குப்பன் தொல்ல தாங்கலயே இவ நாலு நாளா தூங்கலயே" என்ற பாடலும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்த சூழலில், இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

அதில் பேசிய இப்படத்தின் இயக்குநர் சுந்தர் சி, "தமிழ் சினிமாவில் மூன்று வகையான இயக்குனர்கள் இருக்கிறார்கள் அவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். முதலில் 'தனக்குப் பிடித்ததை எடுக்கும் இயக்குனர்கள்'. இரண்டாவது 'மக்களுக்கு பிடித்ததை எடுக்கும் இயக்குனர்கள்'. மூன்றாவது 'ஹீரோவிற்கு பிடித்ததை எடுக்கும் இயக்குனர்கள்'.

இந்த இயக்குனர்கள் வரிசையில், நான் இரண்டாவது வகை இயக்குனர். அந்தவகையில் எப்பொழுதும் நான் மக்களுக்கு பிடித்த படங்களை எடுத்து காண்பிப்பவன். என்னை மாதிரி ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லாமல் வெற்றி அடைய முடியாது. இதனை அடுத்து, வடிவேலுவை குறித்து பேசிய சுந்தர் சி, "சினிமாவில் நானும், வடிவேல் சாரும் இணைந்து 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். காமெடி மற்றும் நடிப்பில் லெஜண்ட் என்று சொன்னால் அது வடிவேல் தான்.

இந்தப் படத்தில் அவருடன் இயக்குனராக இல்லாமல் அவரது ரசிகனாக பணியாற்றினேன்" என்று தெரிவித்துள்ளார்.
 

இதையும் படிங்க: ட்ரெய்லரால் மிரண்டு போன ரசிகர்கள்..! 'கேங்கர்ஸ்' ரிலீசுக்காக காத்திருக்கும் மக்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share