×
 

வரும் திங்கள் முதல் ஜீ தமிழ் சீரியல்கள் ஒளிபரபரப்பில் அதிரடி மாற்றம் - முழு விவரம் இதோ !

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

சேனல் தரப்பில் இருந்து புதுப்புது தொடர்களை ஒளிபரப்ப தொடங்கி வருகின்றன, மதியவேளையில் மனசெல்லாம், இரவு வேளையில் கெட்டிமேளம் போன்ற சீரியல்கள் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில் வரும் திங்கள் ( மார்ச் 17 ) முதல் ராமன் தேடிய சீதை என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. 

கன்னடத்தில் வெற்றி பெற்ற சீதா ராமன் என்ற சீரியலின் டப்பிங் சீரியலாக இது ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் சனி வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிப்பரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக வரும் இதுவரை 2:30 மணிக்கு ஒளிபரப்பாக வந்த மனசெல்லாம் சீரியல் இனி 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மேலும் நானே வருவேன் சீரியல் இனி 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பரமேஸ்வரி பாட்டியின் என்ட்ரி.. ஷாக்கான சாமுண்டீஸ்வரி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட் !

பிறப்பிலேயே சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையுடன் தனியாளாக வாழ்ந்து வரும் சீதையின் வாழ்க்கையில் ராமனின் வருகை எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது? ராமனின் வருகையால் சீதையின் வாழ்க்கை வண்ணமயமாகுமா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம். 

கன்னடத்தில் பலரின் பேவரைட் சீரியலாக இடம் பிடித்து வெற்றி பெற்ற சீரியலின் தமிழ் டப்பிங்கான ராமன் தேடிய சீதை சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

இதையும் படிங்க: சரக்கால் சிக்கிய வெங்கடேஷ்... வேட்டையாட தயாரான சண்முகம்! அண்ணா சீரியலின் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share