பிரான்ஸ் நாட்டில் கல்லீரல் சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்க நோயால் பாதிக்கப் பட்டவர்களிடம் கல்லீரல் புற்றுநோய் தொடர்பான ஆய்வு ஒன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவு ’Journal of Hepatology’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், தினமும் குறைந்தது 240 கிராம் காய்கறிகளை எடுத்துக்கொள்ளும் கல்லீரல் சுருக்க நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குக் கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து 65% குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பழங்கள், காய்கறிகளைத் தினமும் சாப்பிட்டு வருவது கல்லீரல் தொடர்பான புற்றுநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலக அளவில் பரவலாகக் காணப்படும் புற்றுநோய்களில் கல்லீரல் புற்றுநோயும் ஒன்று. கல்லீரல் போன்ற உறுப்புகளில் புற்று நோய் வேகமாகப் பரவும் என்பதால் உடனடி சிகிச்சைகள் அவசியம். சர்வதேச அளவில் ஒவ்வோர் ஆண்டும் 8 லட்சத்துக்கு அதிகமானோர் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இதில் 7 லட்சம் பேர் வரை கல்லீரல் புற்றுநோயால் இறக்கின்றனர். கல்லீரல் நன்றாகச் செயல்படும்போதே, ஆரம்பக் கட்டத்தில் கல்லீரல் புற்றுநோய் கண் டறியப்பட்டால், புற்றுநோய் பரவாமல் தடுக்க முடியும். நிபுணத்துவமிக்க மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சையால் கட்டியை அகற்றி, கல்லீரல் பாதிப்பைத் தவிர்க்கலாம்.
இதையும் படிங்க: மாரடைப்பு ஏற்படும் சில வாரங்களுக்கு முன் என்னென்ன அறிகுறிகள் தோன்றும்.? மிஸ் பண்ணக் கூடாத அறிகுறிகள்.!
இதையும் படிங்க: கொழுப்புச் சத்தை உணவுகள் மூலம் எப்படி குறைக்கலாம்.? இதோ பட்டியல்..!