விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் அர்ச்சனா.

சீரியலில் நடிக்க வருவதற்கு முன், பல தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

ராஜா ராணி சீரியல், இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பை பெற்று தந்தது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்சியில் 28-ஆவது நாளில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.

வைல்டு கார்டு போட்டியாளர்களை டார்கெட் செய்ய வேண்டும் என, ஏற்கனவே உள்ள இருந்த ஹவுஸ் மேட்ஸ் எண்ணியதே இவருக்கு சாதகமாக அமைந்தது.

இதையும் படிங்க: ஜன்னல் வைத்த மாடர்ன் உடையில்... கிக் ஏற்றும் அதிதி ஷங்கர்!
அதே போல் பிரதீபுக்கு அர்ச்சனா குரல் கொடுத்தது இவர் மீது மக்களுக்கு மரியாதையை ஏற்படுத்தியது.

பெரிதாக எந்த ஒரு உழைப்பையும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போடவில்லை என்றாலும், மற்ற போட்டியாளர்களின் டார்கெட் இவரை சொகுசாக ஜெயிக்க வைத்தது.

இவரை தொடர்ந்து இவரின் காதலர் அருண் பிரசாத் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருவருவே காதலர்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்தனர். கூடிய விரைவில் இவர்களுக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் அர்ச்சனா வெளியிட்டுள்ள இந்த ரெட் சாரீ போட்டோஸ் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: காட்டுக்கு நடுவே ட்ரெண்டிங் நாயகி மமிதா பைஜூ எடுத்த கியூட் போட்டோ ஷூட்!