எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மிரட்டி பணிய வைத்துள்ளது.? சந்தேகம் கிளப்பும் திமுக கூட்டணி கட்சி.!!
கொடநாடு வழக்கு நடந்து வருகிறது. இரட்டை இலை இருக்குமா ? இருக்காதா ? அதற்கு மேலாக அதிமுகவில் பொதுச்செயலாளராக பழனிசாமி தொடர முடியுமா ? முடியாதா ?
எடப்பாடி பழனிசாமியை பாஜக மிரட்டி அடிபணிய வைத்துள்ளதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். முத்தரசன் தெரிவித்துள்ளார்
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசிய பிறகு திமுக கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். முத்தரசன் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் முத்தரசன்.
அப்போது அவர், ”தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும் என்கிற உணர்வோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் நிதி வழங்காமல் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சித்து வருகிறது. மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால் எதற்காக மத்திய அரசு நிர்பந்தம் செய்ய வேண்டும்? கொள்கை ரீதியாக என்று எடுத்துக்கொண்டால் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி சேர முடியாது.
கொடநாடு வழக்கு நடந்து வருகிறது. இரட்டை இலை இருக்குமா ? இருக்காதா ? அதற்கு மேலாக அதிமுகவில் பொதுச்செயலாளராக பழனிசாமி தொடர முடியுமா ? முடியாதா ? இதையெல்லாம் சரி செய்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமியை பாஜக மிரட்டி அடிபணிய வைத்துள்ளதா ? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் தொடரும் குற்ற சம்பவங்களை முழுமையாக தடுக்க உளவுத் துறையை அரசு வலுப்படுத்த வேண்டும்” எந்து முத்தரசன் கூறினார்.
இதையும் படிங்க: டெல்லி பறக்கும் தலைகள்... அதிமுக மீது திமுக அமைச்சருக்கு பிறந்த திடீர் கரிசனம்!
இதையும் படிங்க: மீண்டும் செங்கோட்டையன் டெல்லி பயணம்... முக்கிய புள்ளியுடன் ரகசிய சந்திப்பு.. அலறும் இ.பி.எஸ் டீம்..!