×
 

காங்கிரஸின் பொய் பிரச்சாரத்தை தவிடு பொடியாக்கிய பாஜக... மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் தயார்..!

நினைவிடம் குறித்து தங்களுக்கு அறிவிப்பு எதுவும் வரவில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, ​​ராஜ்காட் வளாகத்திலும் அதைச் சுற்றிலும் 19 நினைவுச் சின்னங்கள் உள்ளன.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைப்பது தொடர்பான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. நினைவிடம் கட்டுவதற்கு அறக்கட்டளைக்கு மட்டுமே அரசு நிலம் கொடுக்க முடியும். இந்த விஷயத்தில் இதுவரை அறக்கட்டளை அமைக்கப்படவில்லை. 

அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடம் தொடர்பான நிலமும் அடல் கமிட்டி அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டது. அவர் இறந்து ஒரு மாதத்திற்குப் பிறகே இந்த அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. இப்போது மன்மோகன் சிங்கின் நினைவிடத்திலும் அதே கொள்கையைத்தான் அரசு கடைப்பிடிக்கிறது.

இதற்கிடையில், நினைவிடம் கட்டுவது தொடர்பாக முன்னாள் பிரதமரின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சில விருப்பங்களை வழங்கியுள்ளது. அதன்படி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு ராஜ் காட், தேசிய நினைவகம், கிசான் காட் அருகே ஒன்றரை ஏக்கர் நிலம் இதில் ஏதாவது ஒன்று கொடுக்கப்படலாம்.

இதையும் படிங்க: மன்மோகன் சிங் இறப்பில் அரசியல் ஆதாயம்... சீக்கியர்களிடம் சிண்டு முடியும் காங்கிரஸ்..? இறுமாப்புக்காட்டி இணங்கி வந்த பாஜக..!

தற்போது அதிகாரிகள் ராஜ்காட் உள்ளிட்ட அருகில் உள்ள இடங்களை பார்வையிட்டுள்ளனர். ராஜ்காட் பகுதியில் உள்ள நிலத்தின் முதற்கட்ட மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கான அறக்கட்டளை இன்னும் உருவாக்கப்படாததால் நிலம் ஒதுக்க இன்னும் சில நாட்கள் ஆகும். அறக்கட்டளை நிலத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவுக்குப் பிறகு இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டதாக 'சதைவ் அடல்' (முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சமாதி மற்றும் நினைவிடம்) கட்டிய அடல் கமிட்டி அறக்கட்டளையின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் நிலத்திற்கு விண்ணப்பித்தோம். அதன் பிறகு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கல்லறை ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்ச்சரால் வடிவமைக்கப்பட்டது. அதன் பிறகே அறக்கட்டளையின் கட்டுமானத்திற்கான நிதியை வழங்கினார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய நினைவிடத்தில் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடம் உள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் ஆகஸ்ட் 17, 2018 அன்று இங்கு நடைபெற்றது. அடல் சமிதி அறக்கட்டளை உறுப்பினர் கூறுகையில், ‘‘கொள்கை மாற்றத்தால் அறக்கட்டளைக்கு மட்டுமே நிலம் ஒதுக்கப்பட்டது. ராஜ்காட்டைச் சுற்றியுள்ள மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று முதல் ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசாங்கம் இப்போது பரிசீலித்து வருகிறது. அறக்கட்டளை பதிவு குறைந்தது நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும்’’ எனக் கூறியுள்ளனர்.

இந்த நினைவிடம் குறித்து தங்களுக்கு அறிவிப்பு எதுவும் வரவில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, ​​ராஜ்காட் வளாகத்திலும் அதைச் சுற்றிலும் 19 நினைவுச் சின்னங்கள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிரதிப் பிரதமர் ஆகியோரின் நினைவுச் சின்னங்களும் இதில் அடங்கும். இவை தவிர, சஞ்சய் காந்தி மற்றும் லலிதா சாஸ்திரி (முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மனைவி) ஆகியோரின் நினைவுச் சின்னங்களும் உள்ளன.

மன்மோகன் சிங்கின் நினைவிடத்துக்கு ஏற்ற நிலத்தை அரசு இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது. நிலம் கிடைத்த பின்னரே அறக்கட்டளை விண்ணப்பிக்க வேண்டும். ஆகையால் நினைவிடம் கட்ட இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆனால், அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: இந்திய பிரதமர்கள் மூவரின் இறுதிச் சடங்குகளில் அநீதி..! காங்கிரஸ் கட்சியின் பாரபட்சம்... ‘காந்தி’குடும்பத்தின் உள்குத்து அரசியல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share