×
 

கள்ளக்காதலால் விபரீதம்..! மனைவி போட்ட பக்கா பிளான்.. கோழிக்கடையில் கணவன் சடலம்..!

பென்னாகரம் அருகே இறைச்சி கடைக்காரர் கொலை வழக்கில் மனைவி, கள்ள காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கொரவன் திண்ணை கிராமத்தை சேர்ந்தவர் குமார். (வயது.41). பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஅள்ளி கிராமத்தில் வசித்து வந்தார். இவர் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே கோழி இறைச்சி கடை மற்றும் பழைய இரும்பு கடை வைத்து  நடத்தி வந்தார்.

முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த குமார், பாலக்கோடு எர்ரனஅள்ளி பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 36) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார். 

கோவிந்தம்மாள், கணவருக்கு உதவியாக கோழிக்கடைக்கு சென்று வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கோவிந்தம்மாளுக்கும் புது பட்டாணியர் தெருவை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் நாகராஜ் (வயது.27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ள காதலாக மாறியது.

கணவர் குமார் இல்லாத நேரத்தில் கோவிந்தம்மாள் நாகராஜ் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த குமார், மனைவி கோவிந்தம்மாளிடம் கள்ள காதலை கைவிட கூறியுள்ளார். ஆனால் கள்ள காதலை கைவிட மறுத்து இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கனவன் மனைவிக்கிடையே தகறாறு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்காதலால் விபரீதம்.. காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி.. வீடியோ காலில் கொலையை ரசித்த குரூரம்..!

தகராறில் கோவிந்தம்மாளை, குமார் வீட்டை விட்டு துரத்தினார். இதனால் பாலக்கோடு அண்ணாநகரில் உள்ள தனது அக்கா வீட்டில் தஞ்சமடைந்தார் கோவிந்தம்மாள். இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி காலை  கோழிக்கடை வழியாக சென்றவர்கள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் குமார் இறந்து கிடப்பதாக பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், டி .எஸ்.பி மனோகரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் குமாரின் மனைவி கோவிந்தம்மாளை பிடித்து விசாரித்ததில் கள்ள காதலுக்கு குமார் இடையூறாக இருந்ததால் கணவரை கொன்று விட்டதாக் கூறினார்.

குமாரை கொலை செய்து விட்டு, கோழிக்கடை, இரும்பு கடையை அபகரித்து கொண்டு உல்லாசமாக வாழலாம் என கள்ளக் காதலன் நாகராஜ் உடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியதாகவும் கூறினார். 

அதன்படி  கடந்த 8-ம் தேதி இரவு சுமார்  11 மணிக்கு  கள்ளக் காதலன் நாகராஜ் மற்றும் அவரின் கூட்டாளிகளான  சொன்னம்பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 27) சாமியார் கொட்டாயை சேர்ந்த தமிழரசன் (வயது 25) ஆகியோர், கடையில் தனியாக தூங்கி கொண்டிருந்த குமாரை கை, கால்களை கயிற்றால் கட்டி விட்டு தலையணை முகத்தில் வைத்து அமுக்கியதாகவும்,  அப்போதும் உயிர் போகாததால் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் விசாரனையில் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, நாகராஜ், ஆனந்தகுமார், தமிழரசன் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். கோவிந்தம்மாள், நாகராஜ், ஆனந்தகுமார், தமிழரசன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கள்ள காதலனுக்காக கனவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்காதலால் விபரீதம்.. காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி.. வீடியோ காலில் கொலையை ரசித்த குரூரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share