நிதிஷ் குமாரை துணைப் பிரதமராக்க வேண்டும்... பாஜகவில் கிளம்பிய பகீர் குரல்..!
எதிர்காலத்திலும் நிதிஷ் குமார் மற்றும் நரேந்திர மோடி தலைமையில் தேர்தல்களில் போட்டியிடுவோம்
''பீகார் முதல்வர் நிதிஷ் குமார் துணைப் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்'' என்று பக்ஸார் தொகுதி முன்னாள் எம்.பி. அஸ்வினி சௌபே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ''பிரதமர் நரேந்திர மோடியுடன், நிதிஷ் குமார் தோளோடு தோள் சேர்ந்து நடப்பது போல், அவரை துணைப் பிரதமராக்க வேண்டும். நிதிஷ் குமார் பிரதமரானால் பீகார் வளர்ச்சியடையும். ஜெகஜீவன் ராமுக்குப் பிறகு பீகார் இரண்டாவது துணைப் பிரதமரைப் பெறுவார்'' என அஸ்வினி சௌபே கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, அகில இந்திய கூட்டணி தலைமையிலான எதிர்க்கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை கவர, நிதிஷ் குமாருக்கு துணைப் பிரதமர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு.. திகைத்து போய் சைலண்ட் மோடில் அதிமுக.. விளாசும் திமுக கூட்டணி கட்சி!
ஆனால், அதன் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறி எங்கும் செல்லப் போவதில்லை என்று நிதிஷ் அவ்வப்போது தெளிவாகக் கூறி வருகிறார். அவர் பலமுறை கூட்டணி விட்டு கூட்டணி தாவிய நிலையில், இப்போது வேறு எங்கும் செல்ல மாட்டேன் என்று அடித்துக் கூறி வருகிறார்.
2024 தேர்தலில் பாஜக 240 இடங்களை வென்றது. இது 2019-ல் பெற்ற 303 இடங்களை விட மிகக் குறைவு. மறுபுறம், காங்கிரஸ் 99 இடங்களை வென்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களை வென்றது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமரானார். ஆனாலும், பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வருவதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் முக்கிய பங்கு வகித்தன.
இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. பல பாஜக தலைவர்கள் சட்டமன்றத் தேர்தல் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெறும் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, ''பீகாரில் நிதிஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருகிறது. இரு தலைவர்களின் தலைமையின் கீழ் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம்.
2020 ஆம் ஆண்டிலும் கூட, கூட்டணி நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எதிர்காலத்திலும் நிதிஷ் குமார் மற்றும் நரேந்திர மோடி தலைமையில் தேர்தல்களில் போட்டியிடுவோம்'' என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஆளுநரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.. 2026இல் புதிய முதல்வருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.. பாஜக அதிரடி!!