வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுமி.. நைசாக பேசி ரூமிற்கு அழைத்து சென்ற கயவன்.. கூட்டு பாலியல் கொடுமை செய்த கும்பல்..!
மும்பையில் கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுமியை நைசாக பேசி அழைத்துச் சென்று 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகமாக வெளிவரத்து துவங்கி உள்ளன. பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, இணைய வசதி, தகவல் தொடர்பு போன்றவற்றால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் எளிதில் சிக்கி விடுகின்றனர். ஆனாலும் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறு என்று உணர்ந்தும், மாட்டிக்கொள்வோம் என்ற அச்சம் இல்லாமல் செயல்படுவது வருந்ததகுந்தது. வடக்கு, தெற்கு என்கிற பாகுபாடு இல்லாமல் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு போலீசாரின் நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் மும்பை அருகே 12 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் சில மணி நேரங்களில் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஜோகேஸ்வரி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இரவு வீட்டில் உள்ள பெற்றோரிடம் கோவித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். எங்கு செல்வது எனத் தெரியாமல், ஜோகேஸ்வரி ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடந்து சென்றுள்ளார். இரவு நேரம் தனியாக ஒரு சிறுமி நடந்து செல்வதை பார்த்த கயவன் ஒருவன், சிறுமியை நெருங்கி நைசாக பேச்சு கொடுத்துள்ளான். இந்த இரவில் தனியே எங்கே போகிறாய்? இரவில் எங்கே தங்குவாய்? இன்று இரவு எனது அறையில் தங்கி விட்டு காலையில் கிளம்பி செல். அப்போது தான் பாதுகாப்பாக இருக்கும் என்றெல்லாம் அந்த சிறுமியிடம் பேசி நம்ப வைத்துள்ளான். கயவனின் எண்ணம் தெரியாமல் சிறுமியும் அவனுடன், அவனது அறைக்கு சென்றுள்ளாள்..
இதையும் படிங்க: மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளியின் கோரிக்கை மனு.. ஏற்க மறுத்த அமெரிக்க உச்சநீதிமன்றம்..!
அந்த கயவனின் அறைக்கு சென்ற போது, மேலும் அங்கு 4 பேர் இருந்ததை கண்டு சிறுமி அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அறையில் இருந்த அனைவரும் சிறுமியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளனர். பின்னர் சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்று தாதர் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு சென்றனர். உடல் வலி காரணமாகவும், வீட்டிற்கு செல்ல வழி தெரியாததாலும் சிறுமி அழுதபடி தாதர் ரயில் நிலையத்தில் நின்றுள்ளாள். அதனை கண்டு சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது தான் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி அழுதபடி கூறியுள்ளாள்.
இதையடுத்து சிறுமியை மருத்துவபரிசோதனைக்கு அனுப்பி வைத்த ரயில்வே போலீசார், சம்பவம் குறித்து ஜோகேஸ்வரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், சிறுமியை நாசம் செய்த கும்பலை தேடி வந்தனர். தாதர் ரயில் நிலையம் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை இட்ட போது, பாலியல் வன்கொடுமை செய்த கும்பலில் 2 பேர் சிறுமியை பைக்கில் கொண்டு வந்து டிராப் செய்தது தெரிந்தது. மேலும் அவர்கள் அதே தாதர் ரயில் நிலையம் அருகே நடமாடியதையும் போலீசார் கண்டு பிடித்து கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் படி, ஜோகேஸ்வரி பகுதியில் பதுங்கி இருந்த மீதி 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கர்ப்பமாக இருப்பதாய் பயம் காட்டிய கள்ளக்காதலி.. 2 லட்சம் கேட்டு மிரட்டல்.. வீடியோ காலில் விஷம் குடித்த டெய்லர் காதலன்..!