அம்பேத்கர் ஜெயந்தி- 2025: பாபா சாகேப் இஸ்லாம் மதத்தை ஏற்காதது ஏன் தெரியுமா..?
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையிலான பாகுபாடு சார்ந்த சிந்தனையை பாபா சாஹேப் எதிர்த்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர், தனது வாழ்நாள் முழுவதும் மனிதகுலத்திற்காகப் போராடினார். சமூகத்தில் நிலவும் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவரவும், பலவீனமானவர்கள், தொழிலாளர்கள், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் அவர் தொடர்ந்து நீண்ட போராட்டத்தை நடத்தினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்வதற்காக அவர் தன்னிடம் இருந்த அனைத்தையும் அர்ப்பணித்தார்.
சிறுவயதிலிருந்தே பாகுபாட்டை எதிர்கொண்ட பாபா சாஹேப், சமூகத்திலிருந்து வர்ணாசிரமம் சாதி அமைப்பை முற்றிலுமாக ஒழிக்க விரும்பினார். அதனால்தான் அவர் தனது மதத்தை மாற்ற முடிவு செய்த ஒரு நேரம் வந்தது.
பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் இந்து மதத்தில் பிறந்தார். ஆனால் அவர் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். அதனால்தான் அவர் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். அவரது பிறந்த நாள் ஒவ்வொரு ஏப்ரல் 14 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில், அவர் ஏன் இந்து மதத்தை விட்டு புத்த மதத்தை ஏற்றுக்கொண்டார்.அவர் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை?
இதையும் படிங்க: நான் அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? திருமாவுக்கு சாட்டையடி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தனது பெற்றோருக்கு 14வது குழந்தையாகப் பிறந்தார். அவரது தந்தை ராம்ஜி மாலோஜி சக்பால் பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு சுபேதாரராக இருந்தார். அவர் கபீரின் சீடராகவும் இருந்தார். டாக்டர் அம்பேத்கரின் தந்தை இரண்டு வயதாக இருந்தபோது ஓய்வு பெற்றார். அவர் சதாராவில் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தபோது அவரது தாயார் இறந்தார். அப்போது பாபா சாஹேப்பிற்கு ஆறு வயதுதான். இதற்குப் பிறகு அவரது அத்தை அவரை கவனித்துக்கொண்டார். பின்னர் அவர் தனது கல்வியை முடிக்க பம்பாய்க்கு குடிபெயர்ந்தார். அங்கேயும் கூட, தீண்டாமையும் பாகுபாடும் அவரை விட்டு வைக்கவில்லை.
இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உயர்கல்வி பயின்ற பிறகு, பாபா சாஹேப் ஒரு பணியில் சேர்ந்தார். ஆனால் தீண்டாமை, அவருக்கு எதிரான பாகுபாடு காரணமாக, அவர் அந்த வேலையை உதறினார். 1924 ஆம் ஆண்டு, பாபா சாகேப் தலித் வகுப்புகளின் நலனுக்காக ஒரு சங்கத்தைத் தொடங்கினார். டாக்டர் அம்பேத்கர் இந்த சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். கல்வியை மேம்படுத்துதல், பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துதல், தலித்துகளின் குறைகளை நிவர்த்தி செய்தல் ஆகியவையே இந்த சங்கத்தின் நோக்கம். இது மட்டுமல்லாமல், 1927 ஆம் ஆண்டு, தலித்துகளின் பிரச்சினைகளைத் தீர்க்க பஹிஷ்கிருத பாரத் என்கிற செய்தித்தாளும் தொடங்கப்பட்டது.
இவை அனைத்திற்கும் மத்தியில், பாபா சாஹேப் தீண்டாமை, பாகுபாடு, சாதி அமைப்பு குறித்து மிகுந்த அதிருப்தி அடைந்தார். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள யெவ்லாவில் 1935 அக்டோபர் 13 அன்று தலித்துகளின் மாகாண மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் பாபா சாகேப் நான் இந்து மதத்தில் பிறந்தேன், ஆனால் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் என்று அறிவித்தார். பின்னர் பாபா சாஹேப்பின் ஆயிரக்கணக்கான சீடர்கள் அவரது முடிவை ஆதரித்தனர். 1936 ஆம் ஆண்டு, பம்பாய் பிரசிடென்சி மஹர் மாநாட்டில், பாபா சாஹேப் இந்து மதத்தைக் கைவிட வேண்டும் என்று ஆதரித்தார்.
1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, தலித்துகளின் நலன்களைப் பாதுகாக்க, பாபா சாஹேப் சுதந்திர தொழிலாளர் கட்சியை உருவாக்கினார். அதில் பெரும்பாலும் தொழிலாளர்கள் இருந்தனர். 1938 ஆம் ஆண்டில், தீண்டத்தகாதவர்களின் பெயர்களை மாற்றுவதற்கான மசோதாவை காங்கிரஸ் அறிமுகப்படுத்தியது. இது பாபா சாஹேப்பால் விமர்சிக்கப்பட்டது. வெறும் பெயரை மாற்றுவது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது என்று அவர் நம்பினார். 1942 ஆம் ஆண்டு, பாபா சாஹேப் 'சூத்திரர்கள் யார்?' என்ற புத்தகத்தை எழுதினார். வெளியிடப்பட்டது.
இதற்கிடையில், அவர் மத்திய அரசில் அமைச்சராக இருந்தார். பல கௌரவங்கள், பட்டங்களால் கௌரவிக்கப்பட்டார். ஆனால் சிறுவயதிலிருந்தே சாதி அமைப்பின் சுமையை அனுபவித்த பாபா சாஹேப், இந்து மதத்தை விட்டு வெளியேறி, தனது 3.65 லட்சம் சீடர்களுடன் 1956 அக்டோபர் 14 அன்று புத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை போதிக்கும் மதத்தை தான் விரும்புவதாக பாபா சாஹேப் கூறினார். ஒரு நபர் வளரத் தேவையானது இரக்கம், சமத்துவம், சுதந்திரம். மதம் மனிதர்களுக்கானது... மனிதர்கள் மதத்திற்காக அல்ல. இந்து மதத்தில் இரக்கம், சமத்துவம், சுதந்திரம் இல்லை என்று பாபா சாஹேப் நம்பினார்.
அக்டோபர் 14, 1956 அன்று, அவர் தனது 3.65 லட்சம் சீடர்களுடன் இந்து மதத்தை விட்டு வெளியேறி புத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். மதம் மாறுவதற்கு முன்பு, பாபா சாஹேப் இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களையும் ஆழமாகக் கற்றிருந்தார். இதற்குப் பிறகு இஸ்லாமும், இந்து மதத்தைப் போன்றது என்பதை அவர் ஏற்றுக்கொண்டார். இதில் கூட, தீண்டாமை அப்போது ஒரு பரவலான பிரச்சனையாக இருந்தது. சசி தரூர் பாபா சாஹேப்பின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். இதில், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் இஸ்லாத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனெனில் அது ஒரு மூடிய மத அமைப்பு போன்றது என்று அவர் எழுதினார்.
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையிலான பாகுபாடு சார்ந்த சிந்தனையை பாபா சாஹேப் எதிர்த்தார். பாபா சாஹேப்பின் இந்தப் புரிதலுக்கான ஆதாரம் பிரிவினைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களின் நடத்தையால் பட்டியல் சாதி மக்கள் ஆழமாகப் பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தான் உருவான பிறகு, பட்டியல் சாதி மக்கள் தங்கள் மதத்தை மாற்றி இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது தங்கள் உயிரைக் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது.
பௌத்தம் ஞானம், இரக்கம், சமத்துவத்தை வழங்குகிறது என்று பாபா சாஹேப் நம்பினார். இந்த மூன்றினால் மட்டுமே ஒரு நபர் நல்ல, மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ முடியும். ஞானம் என்பது மூடநம்பிக்கை, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளுக்கு எதிரான புரிதலைக் கொண்டிருப்பதாகும். இரக்கம் என்பது துன்பப்படுபவர்களிடம் அன்பு, அனுதாபம். சமத்துவம் என்பது மதம், சாதி, பாலினம், உயர்வு தாழ்வு ஆகியவற்றைப் பார்க்காமல் அனைத்து மனிதர்களுக்கும் சமத்துவத்தை நம்புவது.
இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..! அண்ணல் அம்பேத்கருக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் மரியாதை..!