நீங்களாம் சுயநலவாதி, கொத்தடிமை..! எஜமான விசுவாசம் தடுக்குதோ..? ஃபுல் ஃபார்மில் இபிஎஸ்..!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம் என அவள ஆட்சியாக உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். பொதுவாக, ஒரு ஆட்சிக்கான அடையாளமாக, அந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே திகழும். ஆனால், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், எங்கும் எதிலும் ஊழல் என குறைகள் மட்டுமே நிறைந்திருக்கும் அவல ஆட்சியாக இருக்கிறது என விமர்சித்தார்.
இதனை ஸ்டாலின் நன்கு அறிந்ததால் தான் ஒரு மாதமாக திசை திருப்பும் முயற்சியாக வரிசையாக நாடகங்களை அரங்கேற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.இலையில் செங்கலை வைத்துவிட்டு சோத்துல கல்லு இருக்கு என்ற கவுண்டமணி நகைச்சுவை போலத் தான் ஸ்டாலின் கொண்டு வரும் தீர்மானங்கள் இருப்பதாக நக்கலடித்துள்ளார். இந்த கருணாநிதி காலத்து டெக்னிக் எல்லாம் இன்னும் மக்களிடம் செல்லுபடியாகும் என்று நம்புகிறீர்களா? வாய்ப்பே இல்லை என்றும் காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே ஏன் என்றும் எஜமான விசுவாசம் தடுக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: இப்படியா தேர்தல் வாக்குறுதியை மறப்பீங்க..? திமுகவை வசைப்பாடிய ஓ.பி.எஸ்..!
மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு நன்மை தரும் என்று தமிழ்நாட்டிலேயே கர்நாடக முதல்வரை பேசவிட்டு வேடிக்கை பார்த்த கொத்தடிமைகள் தானே நீங்கள் என்றும் கேரள கம்யூனிஸ்ட் முதல்வருடன் கைகுலுக்கிக் கொண்டிருக்கும் நீங்கள், ஒரு முறையாவது முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் மாநில உரிமை குறித்து கோரிக்கை வைத்தது உண்டா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரசுக்கு அடிமை சாசனம் எழுதிவிட்டு மத்திய அரசில் பதவி சுகத்தை அனுபவித்த எஜமான விசுவாசிகள் நீங்கள் தானே என்றும் இலங்கை இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, காங்கிரசுக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்த சுயநலவாதிகள் தானே நீங்கள்? எனவும் சரமாரியாக சாடினார். 2ஜி ஊழல், அறிவாலயத்த் ரெய்டு நடத்தி மிரட்டியபோது காங்கிரசிடம் சரணாகதி அடைந்து, உங்கள் கட்சியையே அடகு வைத்தவர்கள் தானே நீங்கள்? அறிவாலயக் கதவுகளை மூடிக்கொண்டாலும் உங்களின் கெஞ்சல், கதறல் சத்தம் அன்றைக்கு தமிழ்நாடு முழுக்க தான் நன்றாக கேட்டதே என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்
இப்படிப்பட்ட வரலாறு கொண்ட உங்களுக்கு, அஇஅதிமுக பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், முடிந்தால் கர்நாடக காங்கிரஸ் , கேரள கம்யூனிஸ்ட் அரசை எதிர்த்து தனிதீர்மானத்தை கொண்டு வாருங்கள் பார்ப்போம் என சவால் விடுத்துள்ளார்.மேலும், அமைச்சர் நேருவுக்காக தொட்டுப் பார்- சீண்டிப் பார் வீடியோ ஷூட்டிங் முடிந்துவிட்டதா எனவும் எப்போது ரிலீஸ் என்றும் சீரியஸ் அரசியலுக்கு நடுவில் மக்களுக்கு அந்த வீடியோ நல்ல நகைச்சுவையாக இருக்கும் என்பதால், அதனை தவறாமல் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டுமெனவும் கிண்டலடித்துள்ளார்.
இதையும் படிங்க: லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கிறது திமுக அரசு.. இபிஎஸ் காட்டம்..!