×
 

தயார் நிலையில் கடற்படை..! இந்த முறை சாவு மணி நிச்சயம்..!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ள நிலையில் புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என கடற்படை வீரர்களுக்கு துணை அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் அறிவுரை வழங்கி இருப்பது பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 48 மணி நேரத்திற்குள் ஏப்ரல் 24ம் தேதி ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து இந்தியா ஏவுகணை சோதனை நடத்தியது. அரபிக் கடலில் இருந்த இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. இதற்கிடையில் இந்தியா உடனான ஷிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த பாகிஸ்தான், அந்த ஒப்பந்த விதிகளை மீறி எல்லையில் தாக்க தொடங்கியது. இதற்கு இந்த ராணுவம் தாக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந் அரபிக்கடலில் நிறுத்தப்பட்டது. 

இதையும் படிங்க: அடங்காத பாகிஸ்தான்.. 5வது நாளாக அத்துமீறல்.. இந்தியா ராணுவம் தக்க பதிலடி..!

ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் மிக்-29கே போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தான் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தனது குடும்பத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் பல அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை தனியார் விமானங்களைப் பயன்படுத்தி இங்கிலாந்து மற்றும் நியூ ஜெர்சிக்கு அனுப்பியுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றமான சூழலில் இந்தியா பதிலடியில் இறங்கினால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்து இவ்வாறு செய்துள்ளனர். இந்த நேரத்தில் இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ x தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், நாங்கள் எப்போதும் தயாராக  இருக்கிறோம் எனக் குறிப்பிட்டு ராணுவத்தினரின் பயிற்சி காட்சியையும் வெளியிட்டுள்ளது. நாங்கள் எதற்கும் பயப்படவில்லை, எதுவும் எங்களை தடுக்காது எனவும் பதிவிட்டுள்ளது. இதேபோல் இந்தியாவின் 5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது. இதன்படி ஒற்றுமையில் தான் சக்தி இருக்கிறது.. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எப்படி வேண்டுமானாலும் தயாராக இருக்கிறோம் எனும் வார்த்தைகளோடு 5 போர் கப்பல்களின் புகைப்படங்களை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. 

இதற்கிடையே விசாகப்பட்டிணத்தில் உள்ள கிழக்கு கடற்படை வீரர்களுடன் கிழக்கு கடற்படை தளபதி துணை அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் கலந்துரையாடல் நடத்தினார். இந்த உரையாடலின் போது, துணை அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர், தற்போதைய பாதுகாப்பு சூழலை எடுத்துரைத்தார். கடற்படை தயார் நிலையில் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அனைத்து கடற்படை வீரர்களும் விழிப்புடன் இருக்கவும், வளர்ந்து வரும் சவால்களையும் எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருக்கவும் வலியுறுத்தினார்.

கிழக்கு கடற்படையின் செயல்பாடுகளை பாராட்டிய அவர், தனிப்பட்ட பாதுகாப்பு, சைபர் மற்றும் தகவல் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பணியாளர்களை அறிவுறுத்தினார். கடல்சார் விழிப்புணர்வு, செயல்பாட்டு சவால்கள், பயிற்சி போன்றவை குறித்து அவர் கடற்படை வீரர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு கடற்படை இந்திய கடல் எல்லையைப் பாதுகாக்கிறது. ஏற்கனவே இந்திய கடற்படை, ராணுவம் ஆகியவை தயாராக உள்ளதாக அறிவித்த உள்ள நிலையில் துணை அட்மிரல் வீரர்களுடன் கலந்துரையாடி அனைத்திற்கும் தயாராக இருக்கும்படி கூறி இருப்பது பாகிஸ்தானுக்கு சாவு மணி நிச்சயம் என்பதை கூறியது போல உள்ளது.

இதையும் படிங்க: உளறிக் கொட்டிய கவாஜா.. ஐ.நா சபையில் வச்சு செஞ்ச இந்தியா.. அனல் பறக்கும் பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share