பொன்முடி நீக்கப்பட்ட 30 நிமிடத்தில் அடுத்த அதிரடி... மொத்தமாய் முடித்துவிட்ட மு.க.ஸ்டாலின் ..!
இதனால், இனி அந்தப்பொறுப்புக்கு பொன்முடி மீண்டும் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு தந்தை பெரியார் விழா பொதுமேடையில் பெண்கள் மத்தியில், வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியில் நீக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
பொதுமேடைகளில் சர்ச்சையாகப்பேசி கண்டனங்களை எதிர்கொண்டுந்த அமைச்சர் பொன்முடி கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் விழாவில் பேசும்போது, ''தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள் மகளிர். விலைமாதுவின் வீட்டிற்கு ஒருத்தன் போகிறான்.போகும்போது அங்கே அந்த அம்மா கேட்குது.
நீங்க சைவமா? வைணவமா? எனக் கேட்கிறார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பணம் ஏதாவது 5 கொடு கொடு, 10 கொடு எனக்கேட்டால் புரிந்து இருக்கும். என்னடா இங்கே வந்து இந்தப்பெண் சைவமா? வைணவமா எனக் கேட்கிறார்..? எனக்கு ஒண்ணும் புரியவில்லையே எனக் கேட்டான். அதற்கு அந்த விலைமாது சைவம் என்றால் இப்படி..? வைணவம் என்றால் இப்படி என கைகைகளை வைத்து விவரிக்கிறார். அவனுக்கு ஒண்ணும் புரியல.
இதையும் படிங்க: முறையாக தகவல் சொல்ல அரசுக்கு என்ன தயக்கம்? TNPSC குரூப் 4 விவகாரத்தை கையில் எடுத்த அன்புமணி!
அந்த விலைமாது சைவம் என்றால் படுத்துக் கொள்வது. வைணவம் என்றால் நின்று கொண்டு செய்வது? நின்று செய்தால் 5... படுத்துக் கொண்டால் 10...'' எனச் சொல்லிவிட்டு பொன்முடி குலுங்கி குலுங்கி சிரித்தார். அவர் பேசிய வீடியோ வைரலாகி கடும் விவாதங்களை கிளப்பியது
பொதுமக்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். திமுக துணைப் பொதுச்செயாளர்களில் ஒருவரான கனிமொழி எம்.பி, ''அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது'' எனத் தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியிட்டுள்ள அறிக்கையில் , கழக துணைச்செயலாளர் பதவி வகித்து வரும் பொன்முடி அப்பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்'' என அறிவித்துள்ளார். எப்போதும் பொதுச்செயலாளர் மட்டுமே கட்சியின் பதவியில் இருப்பவரை நீக்கி அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை பொன்முடியை நீக்குவதாக மு.க.ஸ்டாலினே அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
பொன்முடி நீக்கப்பட்ட அரைமணி நேரத்தில், கழக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த திமுக எம்.பி திருச்சி திருச்சி சிவா துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், இனி பொன்முடி மீண்டும் அவர் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு மீண்டும் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
''கட்சியில் இனி பொன்முடிக்கு படுக்கைதான்... நிற்கவே முடியாது'' என பலரும் அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: உண்மை, இரக்கம், அகிம்சை வளர்த்தவர் மகாவீர்! முதல்வர் ஸ்டாலின் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து..!