அதிகார மமதை... திமுக அமைச்சர்களின் அருவருப்பான ஆபாசப்பேச்சு... கடுப்பான காங்., எம்.பி..!
திமுக அமைச்சர்களின் சில பேச்சுக்கள் அருவருப்பானது; கண்டிக்கத்தக்கது. அதிகார மமதையால் அப்படி பேசுகிறார்கள்
''அதிகார மமதையால் திமுக அமைச்சர்கள் சிலர் பேசும் பேச்சு மிகவும் அருவருக்கத்தக்கது என்பதோடு நிச்சயம் கண்டிக்கத்தக்கது'' என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி இந்து சமயத்தின் சைவ- வைணவ பிரிவுகளை விலைமாது கதை சொல்லி ஆபாசமாகப் பேசினார். துரைமுருகன் மாற்றுத் திறனாளிகள் குறித்து கீழ்த்தரமாக பேசி மன்னிப்பு கேட்டிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர், ''சாதிய கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீடு, ஜாதி கணக்கெடுப்பு எடுத்த பின்பு 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா ஜாதிய கணக்கெடுக்கும் விவாதத்தை துவக்கி உள்ளது.
இதையும் படிங்க: இன்னும் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறாரே இந்த ஆளுநர்.. ஆர்.என். ரவி மீது ஜோதிமணி தாக்கு.!!
தமிழக அரசு அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்னவெல்லாம் பேசினார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
திமுக அமைச்சர்களின் சில பேச்சுக்கள் அருவருப்பானது; கண்டிக்கத்தக்கது. அதிகார மமதையால் அப்படி பேசுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. வஃக்பு வாரிய சட்ட மசோதாவை காங்கிரஸ் முழுமையாக எதிர்க்கிறது. திருப்பரங்குன்றம் கல்லூரி நிகழ்ச்சியில் கவர்னர் ஜெய் ஸ்ரீராம் என கூறி மாணவர்களை மத அடிப்படையில் திசை திருப்புவது வருத்தம் அளிக்கிறது.
ஏப்ரல் 24ல் மதுரையில் தென் மண்டல ரயில்வே ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில் தென் மாவட்ட மக்களின் பிரச்னைகள் குறித்தும் கூடுதல் ரயில்கள் இயக்குவதன் அவசியம் குறித்தும் கோரிக்கைகள் வைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., ஒருவர், ‘அதிகார மமதையில் திமுக அமைச்சர்கள் பேசுவது கண்டிக்கத்தக்கது’ என கூறியிருப்பது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: மோடி, அமித்ஷாவும் தெருத்தெருவா போஸ்டர் ஒட்டி இருக்காங்க..! பிரியங்கா என்ன இளவரசியா..? ராஜ் தீப் அதிர்ச்சி பேட்டி..!