'திமுகவின் மோசமான அதிகார துஷ்பிரயோகம்... இன்பநிதியால் 2026ல் துன்பம் வரும்..' அண்ணாமலை ஆவேசம்..!
உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வந்திருந்த உதயநிதி, இன்பநிதி ஒன்றாக விழா மேடையில் சேர்ந்திருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பதிவிட்டு ‘திமுகவில் அடுத்த தலைமுறை உதயம்’ என பதிவிட்டு வருகிறார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ‘இன்பநிதி’ வருகை திமுகவை தவிர அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜல்லிக்கட்டு மேடையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை எழ வைத்து இன்பநிதியின் நண்பர்களை முன் வரிசையில் அமர வைத்தார் வைத்தார் அமைச்சர் மூர்த்தி.இது பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பதிவில்,''மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதையும் படிங்க: குட்டி தளபதியின் பேண்டில் தூசி தட்டிய அமைச்சர்… இன்பநிதியின் நண்பர்களுக்காக உதயநிதி முன் அசிங்கப்பட்ட பெண் கலெக்டர்..?
துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம். முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைக்கு காரணம், ''உதயநிதி பதவிக்கு வந்ததே குறுக்குவழிதான். அன்று அதை எதிர்க்காமல் முட்டுகொடுத்ததால்தான், இன்று இன்பநிதி கூட அல்ல, அவரின் அல்லக்கைகள் உட்காருவதற்காக அமைச்சர்கள் எழுந்துநிற்க வேண்டியநிலை. கூலிகள், கொத்தடிமைகள் இதற்கும் முட்டு கொடுப்பார்கள். பகுத்தறிவாளர்கள் இப்போதாவது சிந்திக்கட்டும்.
இது மன்னராட்சி இல்லாமல் என்னவாம்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதால், உதயநிதிக்கு மரியாதையை தருவது நியாயம். ஆனால், இன்பநிதி? எதற்காக அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், அவருக்கு இந்த தேவையற்ற மரியாதையை கொடுக்கிறார்கள்? அதிலும் இன்பநிதியின் நண்பர்களுக்காக, ஒரு கலெக்டரை இப்படி நடத்துவது என்ன நியாயம்? பிறப்பால் ஒருவர் பதவிக்கு வந்தால் எப்படி கேடுகெட்ட தனமாக ஒரு நிகழ்ச்சி இருக்கும் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் தான் இவைகள்.
மாவட்ட ஆட்சியரை எழுப்பி விட்டு இன்பநிதி நண்பர்களுக்கு இடத்தை கொடுக்க செய்தது. துணை முதலமைச்சர் மகன் மற்றும் மகனின் நண்பர்களுடன் அமர்ந்து இருப்பது.ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் அவர்களை நிற்க வைத்து விட்டு இந்த சிறுவர்கள் அமர்ந்து இருக்கிறார்கள்'' என்றெல்லாம் கண்டனக் குரல்கள் ஓங்கி எழ ஆரம்பித்துள்ளன.
இதையும் படிங்க: இடைத்தேர்தலால் வளர்ந்த கட்சி அதிமுக.. இன்று இடைத்தேர்தலை கண்டு அஞ்சுகிறதா?