விடிந்ததுமே பரபரப்பு; அமைச்சரின் மகன், சகோதரை சுத்துப்போட்ட ED... 7 இடங்களில் அதிரடி ரெய்டு
அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குத் தொடர்புடைய 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் கே.என் ரவிச்சந்திரனின் டிவிஹெச் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அருண் நேருக்கு சொந்தமான தில்லை நகரில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் கே.என்.நேரு உடைய சகோதரர் மற்றும் அவருடைய மகன் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாகபிவிச் என்று சொல்லக்கூடிய ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் என்கிற நிறுவனத்தில் தான் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த சோதனையானது 7 மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்ததுறை அதிகாரிகள் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஐந்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்களுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக அமைச்சருடைய மகன் அருண் என்பவருக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டையில் உள்ள இடத்தில் செயல்பட்டு வரும், கேஜிஎஸ் என்ஆர் ரைஸ் இண்டஸ்ட்ரியல் பிரைவேட் லிமிட் என்கிற நிறுவனத்திலும், மயிலாப்பூர் சிஐடி காலனியில் இருக்கக்கூடிய பிரகாஷ் என்பவருது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல அடையாறு, காந்தி நகர், ஆரியபுரம், கிருஷ்ணாபுரி, சாஸ்திரி நகர் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 5 பைகளில் கட்டுக்கட்டாய் பணம்.. மிஷின் வைத்து எண்ணிய அதிகாரிகள்.. முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனம் சீல்..!
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சரின் மகன் தொடர்புடைய கட்டுமான நிறுவனங்களில் சட்ட விரோத பணப்பரிமாற்ற செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் தன தற்போது சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக தமிழகத்தில் அனைத்து கட்டுமான நிறுவனங்களையும் அமலாக்கத்ததுறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தார்கள். பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. பல கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிவர்த்தனை மேற்கொண்டதும் கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எம்புரான் பட தயாரிப்பாளர் வீட்டில் திடீர் ரெய்டு... பரபரப்பு பின்னணி..!