×
 

திருப்பரங்குன்றத்திற்கு சென்னையில் வேல்யாத்திரையா?.. தேவையில்லாமல் பிரச்சனை செய்வதா என நீதிமன்றம் கேள்வி..?

திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்காக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை ஏகாம்பநாதர் கோவிலில் இருந்து கந்தக்கோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி பாரத் இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் யுவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்து வாதிட்ட தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, யாத்திரைக்கு மனுதாரர் கேட்கும் வழித்தடம் நெருக்கடியான போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை. ஏற்கனவே  திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூகவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல என்று வாதிட்டார்.

காலங்காலமாக திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மக்கள் இந்து, முஸ்லிம் மற்றும் ஜெயின் ஆகியோர் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், திருப்பரங்குன்றம் மலையை காரணமாக்கி, தேவையற்ற கலவரங்களை உருவாக்கி மக்களின் ஒற்றுமை குலைந்து விடக்கூடாது. தமிழ்நாடு மத நல்லிணத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் பெயர்பெற்றது. மத நல்லிணக்கத்தை காப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் ஒவ்வொருவரின் மத நம்பிக்கையை பாதுகாப்போம் என்றும் யாருடைய மத வழிபாட்டிலும் அரசு தலையிடாது  என்றும் உறுதிப்பட தெரிவித்தார். 

இதையும் படிங்க: அடடே இது புதுசா இருக்கே.. அன்னதானம் சாப்பிடுவது போல் நுழைந்து ஆர்பாட்டம்.. இந்து முன்னணி மகளிர் அமைப்பினர் கைது..

யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்னைகளை உருவாக்கும் என்பதால் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது என தனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், யாத்திரை நடத்த கேட்டுள்ள வழித்தடம்  நெரிசல் மிகுந்தது. திருப்பரங்குன்றம் மலை பிரச்னைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க வேண்டாம் என  நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். இன்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி இளந்திரையன், யுவராஜின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

இதையும் படிங்க: இன்னொரு அயோத்தி ஆகிறதா திருப்பரங்குன்றம்..? 144 தடை உத்தரவு போட வேண்டிய அவசியம் ஏன்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share