சிவகாசி மேற்கு பகுதி ரிசர்வ் லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் சாம் டேவிட்( வயது 25). இவர் விருதுநகர் தனியார் பள்ளியில் நடந்து வரும் பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்களை பழுது நீக்கும் மெக்கானிக்காக இருந்து வந்துள்ளார். பொருட்காட்சி நடைபெற்று வருவது பற்றி பொது மக்களிடையே விளம்பரப் படுத்துகின்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அதே பொருட்காட்சியில் விருதுநகரை சேர்ந்த பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கோடை விடுமுறை என்பதால் பொருட்காட்சியில் பணியாற்றி வந்திருக்கிறார். அதில் இரண்டு மாணவர்களை டேவிட், விளம்பர பதாகைகள் தயாரிக்க உதவினால் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சிவகாசியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து இருவரும் மயக்கமடைந்து வீட்டினுள் படுத்திருந்த நிலையில் கிடந்துள்ளனர். திடீரென மயக்கம் தெளிந்து எழுந்த மாணவன் தான் நிர்வாண கோலத்தில் படுத்திருந்ததைய றிந்து அதிர்ச்சியுடன் அருகில் படுத்திருந்த மற்றொரு மாணவையும் எழுப்பி பூட்டியிருந்த வீட்டைத் திறந்து வெளியேறியேறியுள்ளனர். நேராக சிவகாசி காவல் நிலையத்திற்குச் சென்ற மாணவர்கள் டேவிட் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே போதையில் தனது வீட்டில் படுத்திருந்த சாம் டேவிட் காவல் நிலையத்தில் பள்ளி மாணவன்புகார் தெரிவித்ததை அறிந்து தலை மறைவானார். நடந்த சம்பவங்கள் குறித்து தகவலறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் சிவகாசி காவல் நிலையத்திற்கு வந்து, போலீசார்கள் நடந்த சம்பவத்தின் உண்மையான நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, எந்த ஒரு குற்றம் நடந்திருந்தாலும், யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவனின் உறவினர் முத்தீஸ்வரன் கொடுத்துள்ள புகாரின் பேரில், குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து குடிக்க செய்து மயக்கமடைந்த நிலையில் பள்ளி மாணவனை பாலியல் தொல்லை செய்துதாக சாம் டேவிட் மீது போச்சோ வழக்கு பதிவு செய்துள்ள சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார், தலைமறைவான சாம்டேவிட்டை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு செல்போனில் டார்ச்சர்.. போட்டோவை மார்பிங் செய்து மிரட்டல்.. கம்பி எண்ணும் இளைஞர்கள்..!
இதையும் படிங்க: 14 பேர் சேர்ந்து சிறுமிகளை சீரழித்த கொடூரம்... புதுவையை உலுக்கும் சம்பவம்!