×
 

கிரஷர், ஜல்லி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்..! அரசுக்கு வைக்கும் முக்கிய கோரிக்கை என்ன..?

புதிதாக விதிக்கப்பட்டுள்ள சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

சேலம் மண்டல கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வேலை நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும், இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர் என்றும் கூறினார். குவாரிகளில் இருந்து கல் எடுத்து வர இதுவரை கனமீட்டர் அடிப்படையில் அரசுக்கு வரி செலுத்தி வந்த நிலையில், தற்போது மெட்ரிக் டன் முறையில் வரி செலுத்த வேண்டும் என்று அரசு புதிதாக வரி விதித்து உள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரு நாளைக்கு ரூ.200 கோடி நஷ்டம்..! ஸ்ட்ரைக் நீடிக்கும்.. டேங்கர் லாரி உரிமையாளர்கள் திட்டவட்டம்..!

இதனால் ஜல்லி, எம். சாண்ட் மற்றும் பி.சாண்ட் ஆகியவற்றுக்கு விலையை உயர்த்த வேண்டிய சிக்கல் உள்ளதால், புதிதாக விதிக்கப்பட்டு உள்ள சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறினார். இதனால் அரசுக்கு தினமும் ரூ.300 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நஷ்டத்துக்கு லாரி ஓட்ட முடியாது! டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share