×
 

பல கோடி மோசடி.. நிற்கதியான மக்கள்.. மீண்டும் தேவநாதனின் ஜாமீன் நிராகரிப்பு..!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி உள்ள தேவநாதனின் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது. இந்த நிலையில், தேவநாதன் யாதவ், குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நிதி நிறுவனத்துக்கு எதிராக சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாகவும், பணபலம் மற்றும் அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதால் ஜாமீன் கொடுத்தால் மக்களுக்கு பணம் கிடைக்காது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி கூறினார்.

இதையும் படிங்க: கொரோனா நோயாளியை வன்கொடுமை செய்த சம்பவம்..! ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆயுள் தண்டனை..!

காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், இந்த வழக்கின் விசாரணைக்கு தேவநாதன் யாதவ் உள்ளிட்ட மனுதாரர்கள் சரியாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் தேவநாதன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கை, கால்களை கட்டி வாயில் துணியை அடைத்து.. சினிமா பாணியில் தொழிலதிபர் கடத்தல்.. பகீர் பின்னணி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share