×
 

பாஜகவோடு கைக்கோர்த்ததில் பெருமை..! இது முன்னேற்றத்திற்கான கூட்டணி.. மார்தட்டிக் கொள்ளும் இபிஎஸ்..!

பாஜகாவோடு கூட்டணியில் கைக்கொர்த்தது பெருமையாக உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடுகளால் பிளவுபட்ட அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. கூட்டணி குறித்த அறிவிப்பை 2 நாள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இந்த நிலையில், கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கைகோர்க்கும் என்ற ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடும் பெருமை தனக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா வுக்கும் கிடைத்தது என்றும் திமுகவின் தீய ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை விடுவிப்பதற்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்வதற்கும், வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வாய்ப்புகளின் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கும் இந்த கூட்டணி உறுதியுடன் உள்ளது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: ஷாக் மேல ஷாக்..! அதிமுகவில் இருந்து விலகிய முக்கியப்புள்ளி..!

மேலும், தனது இல்லத்தில் நடத்தப்பட்ட இரவு விருந்தில் கலந்து கொண்டதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பதகாவும்,ஒன்றாக, பிரகாசமான, வலுவான மற்றும் துடிப்பான தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதியான தீர்மானத்துடன் முன்னேறிச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவிற்கு அளித்த அசைக்க முடியாத ஆதரவிற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். NDA உடனான கூட்டாண்மையில் வரவேற்கப்படுவதை பெருமையாகக் கருதுவதாகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான பொதுவான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணி இது எனவும் தெரிவித்தார்.

இந்த முக்கியமான தருணத்தில், பிரதமர் மோடியின் தொலைநோக்கு வழிகாட்டுதலுடன், மக்களின் விருப்பங்களை நனவாக்குவதற்கும், அவரது மாற்றத்திற்கான தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிப்பதற்கு கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக நெருக்கமாகப் பணியாற்றும் என்றும் வாரிசு அரசியல், ஊழல் மற்றும் சரியான நிர்வாகம் கொண்ட ஒரு பெரிய தமிழ்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றாக உறுதிபூண்டுள்ளதாக கூறினார்.

தமிழக மக்கள் வெளிப்படையான, வளர்ச்சியை மையமாகக் கொண்ட அரசாங்கத்திற்கு தகுதியானவர்கள் என்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் அதை வழங்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இதுக்குத் தான் பதவி விலகுறாரா அண்ணாமலை? - ரகசியத்தை உடைத்த துக்ளக் ரமேஷ்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share