×
 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்து என்னாச்சு..? பாயிண்டைப் பிடித்த ஓ. பன்னீர்செல்வம்.!

ஒற்றைத் தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்க திறனற்ற கட்சியாக அதிமுக உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்தார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "நமக்கெல்லாம் தெய்வமாக இருக்கும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நிரந்தர பொதுச்செயலாளர் பதவியில் அமர எடப்பாடி பழனிசாமிக்கு எப்படிதான் மனம் வந்ததோ தெரியவில்லை. அதிமுகவில் யாருமே ரத்து செய்ய முடியாத விதியையும் ரத்து செய்திருக்கிறார். இதில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம் உரிய முடிவெடுக்கும்.

அதிமுக கட்சிக்கென சட்ட விதிகளை உருவாக்கி, பதிவு செய்த பிறகு விதிகளில் இருந்து மாறுபட்டால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. 3 ஆண்டுகளாக கட்சியை ஒன்றிணைக்கப் போராடி வருகிறேன். அனைவரும் ஒன்றிணையும் காலம் வெகு தூரத்தில் இல்லை. வரும் காலம் தேர்தல் காலம். என்னிடம் சில ரகசியங்கள் இருக்கின்றன. அதன்படி செயல்பட்டால், 2026இல் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை அமைக்க முடியும்” என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அனைவரும் ஒன்றிணைந்தால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும்.  தொண்டர்களும், மக்களும் இதைத்தான் நினைக்கின்றனர். ஒருமித்த கருத்தோடு அனைவரும் இணைய வேண்டும். அதற்கு சிலர் தடையாக இருக்கின்றனர். கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று சொன்னார்கள். ஒற்றைத் தலைமைக்கு வந்தும் தேர்தலை சந்திக்க திறனற்ற கட்சியாகதான் அதிமுக உள்ளது" என்று ஓ
பன்னீர்செல்வம் தெரிவித்தா.

இதையும் படிங்க: 'ஓ.பிஎஸிடம் வைத்துக் கொள்… என்னிடம் வேண்டாம்…' ஆர்.பி.உதயகுமாரை வெளுத்து வாங்கிய செங்கோட்டையன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share