தென்காசி மாவட்டம் சுரண்டை அடுத்த சேர்ந்தமரம் அருகேயுள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மரியா ஆரோக்கியசெல்வி (32). கடந்த 5 ஆம் தேதி இவர், தனது கணவர் முத்துக்குமார் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு திடீரென மயக்கமடைந்து விட்டதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் விரைந்து வந்து அவரை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு மரியா ஆரோக்கியசெல்வி அழுது புரண்டு உள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேகத்தின் காரணமாக முத்துக்குமார் மனைவியை ரகசியமாக கண்காணித்து வந்தனர். பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், முதற்கட்ட அறிக்கையில், முத்துக்குமார் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர். ஆனால் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை போலீசார் காத்திருக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் எப்படியும் உண்மை தெரிந்து விடும் என்று எண்ணிய மரியா ஆரோக்கிய செல்வி, போலீசில் சரணடைந்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலம்:
இதையும் படிங்க: அஞ்சு கட்சி அமாவாசை, பத்து ரூபாய் தியாகி... அமைச்சர் செந்தில் பாலாஜியை டேமேஜ் ஆக்கிய மாஜி அமைச்சர்.!
எனது கணவர் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். பிள்ளைகளை அடிப்பது, என்னை அடிப்பது என தொடர்ந்து டார்ச்சர் செய்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். கடந்த 5ம்தேதி எனது கணவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கழுத்தை நெரித்தேன். எனது 12 வயது மகன் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கினான். இதில் அவர் மயங்கிவிட்டார்.
அதன் பின்னர் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் மஞ்சள் காமாலையில் எனது கணவர் மயங்கிவிட்டார் எனக் கூறி நடித்தேன். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் எப்படியும் சிக்கி விடுவோம் என தெரிந்ததால் நானே சரணடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து மரியா ஆரோக்கிய செல்வி, அவரது 12 வயது மகனை போலீசார் கைது செய்தனர். மரியா ஆரோக்கியசெல்விக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திவ்யா சத்யராஜுக்கு திமுக காட்டிய திவ்ய தரிசனம்... கட்சியில் இணைந்த ஒரே மாதத்திற்குள் முக்கியப் பதவி..!