×
 

சுமாரான இலக்கை எட்டியுள்ள டெல்லி கேபிடல்ஸ்... வெற்றி பெறுமா ராஜஸ்தான் ராயல்ஸ்?

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 188 ரன்கள் குவித்துள்ளது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி  ராஜஸ்தான் அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக மெக்கர்க் மற்றும் அபிஷேக் போரெல் களமிறங்கினர். அபிஷேக் போரெல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் ஓவரில் 2 பவுண்டரிகளும் 2வது ஓவரில் 4 பவுண்டரிகளும் ஒரு சிக்சும் அடித்து விளாசினார். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. மறுபுறம் மெக்கர்க் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த கருண் நாயர் டக் அவுட் ஆனார். பின்னர் அபிஷேக் போரெல் - கேஎல் ராகுல் கூட்டணி இணைந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இதையும் படிங்க: இவருக்கு 9 கோடியா..? ஆள மாத்துங்க.. டெல்லி அணியின் மெக்கர்கை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!!

இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி வெறும் 46 ரன்களை மட்டுமே குவித்திருந்தது. கேஎல் ராகுல் பெரிய ஷாட்டை ஆட முயன்றதால் 32 பந்துகளில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அபிஷேக் போரெலும் 37 பந்துகளில் 49 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அக்சர் படேல் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் ஸ்டப்ஸ் - அஷுதோஷ் சர்மா கூட்டணி இணைந்து 19வது ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 16 ரன்கள் குவித்தனர். சந்தீப் சர்மா பந்து வீசிய கடைசி ஓவரில் 4 ஒய்டு, 1 நோ-பால் உட்பட 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் டெல்லி அணி இறுதியாக 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: எல்லா போட்டிகளும் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.. RR கேப்டன் சஞ்சு சாம்சன் ஓபன் டாக்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share