×
 

பார்க்க முடியாத உயரத்திற்கு சென்ற பந்து... KKR விக்கெட் கீப்பர் செய்த வினோத செயல்!!

பார்க்க முடியாத உயரத்திற்கு சென்ற பந்தை பிடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

2025 ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை குவித்தது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதை அடுத்து அணியின் கேப்டன் ரியான் பராக் களம் இறங்கினார். அவர் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 25 ரன்களை குவித்தார். அப்போது வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தை அவர் தூக்கி அடித்தார். பந்து உயரமாக சென்றதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் பந்தை பிடிக்க சென்றார். ஆனால், பந்து பார்க்க முடியாத உயரத்துக்கு சென்றதால் அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதற்காக தனது ஹெல்மட்டை கழட்டி எறிந்துவிட்டு  அந்த பந்தை மிகச்சிறபாக கேட் பிடித்தார்.

இதையும் படிங்க: மோசமான வரலாற்றை பதிவு செய்த மேக்ஸ்வெல்... ஸ்ரேயாஸ் தான் காரணமா?

அவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதன் மூலம் ரியான் பராக் விக்கெட் வீழ்த்தப்பட்டது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் 151 ரன்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்தது.  

இதை அடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் மொயின் அலி களமிறங்கினர். இதில் முதல் விக்கெட்டாக மொயின் அலியின் விக்கெட் வீழ்த்தப்பட்டது. இதை அடுத்து களமிறங்கிய ரஹானே 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.  மறுபுறம் குவின்டன் டி காக் அபாரமாக ஆடி வருகிறார். 

இதையும் படிங்க: வீல் சேரில் ராகுல் டிராவிட்... என்னாச்சு அவருக்கு? பதறிய ரசிகர்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share