அபாரமான ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி... லக்னோ அணியை அசால்ட்டாக வீழ்த்தி வெற்றி!!
பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
2025 ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் லக்னோ அணியும் விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய லக்னோ அணி தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். ஏய்டன் மார்க்கரம் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து லோகி பெகுர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து களமிறங்கிய பண்ட் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.
5 பந்துகளை எதிர்கொண்ட அவர் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் மெக்ஸ்வெல் பந்துவீச்சில் பண்ட் ஆட்டம் இழந்தார். இதனால் லக்னோ அணி ரன்களை குவிக்க முடியாமல் திணறியது. இதை அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் மற்றும் ஆயுஸ் பதோனி ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடி ரன்களை குவித்து அணியை தூக்கி நிறுத்தினர். பூரான் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க: ஏமாற்றிய ரிஷப் பண்ட்; டீமை தாங்கிபிடித்த பூரான்... லக்னோ உரிமையாளர் அதிருப்தி!!
பின்னர் சாஹல் பந்துவீச்சில் பூரான் ஆட்டம் இழந்தார். ஆயுஷ் பதோனியும் 33 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் டேவிட் மில்லர் வெறும் 18 பந்துகளில் 19 ரன்கள் தான் சேர்த்தார். இதன்மூலம் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. 172 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரியண்சு ஆர்யா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பிரப்சிம்ரன் சிங் அபாரமாக ஆடி 9 பவுண்டிரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்து 69 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நேகல் வாதேரா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும் நேகல் வாதேரா 43 ரன்களும் குவித்தனர். இருவரும் மிக சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர். இதன் மூலம் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: மிக விரைவாக அதிக ரன்கள்... மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சாதனை!!