இங்கிலாந்தை ஓரம்கட்டிய தென்னாப்பிரிக்கா...7 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி!!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐசிசி சாம்ன்பியன்ஸ் தொடரின் 11வது லீக் ஆட்டம் இன்று பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதின.
முன்னதாக லீக் ஆட்டத்தில் ஒரு போட்டியில் வெற்றிப்பெற்ற தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் அதிக புள்ளிகளை பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றிப்பெறாத இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
இந்த சூழலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் கோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி போட்டி தொடங்கியதும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் சால்ப்ட் 8 ரன்களிலும், டக்கெட் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். அடுத்ததாக வந்த ஜேமி ஸ்மித் ரன் எடுக்காமல் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
இதையும் படிங்க: தென்னாப்பிரிக்காவின் சூறாவளி பவுலிங்கில் சுருண்ட இங்கிலாந்து... 180 ரன்கள் இலக்கு!!
இவர்களை தொடர்ந்து இணை சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஜோடி தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். ரூட் 37 ரன்களிலும், புரூக் 19 ரன்களிலும் வெளியேற இங்கிலாந்து அணி 30 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது.
அடுத்ததாக களமிறங்கியுள்ள கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஜேமி ஆட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து விளையாடினர். 35வது ஓவரில் கேப்டன் பட்லர் லுங்கி வீசிய பந்து வீச்சில் மஹராஜிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் பட்லர் நிதான ஆட்டத்தின் மூலம் அணிக்கு ரன் சேர்ப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் அவுட்டானது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. அடுத்தடுத்த ஓவர்களில் ஒவ்வொருவராக அவுட்டாக 39 ஓவர் முடிவதற்குள் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
38.2 ஓவர்களில் 179 ரன்களை எடுத்த இங்கிலாந்து அணி தென்னாப்பிர்க்காவுக்கு 180 ரங்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. பீல்டிங்கிலும், பவுலிங்கிலும் அதிரடி காட்டிய தென்னாப்பிரிக்க அணியில் மார்கோ ஜான்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், வியான் மல்டர் 3 விக்கெடுகளையும், கேசவ் மகராஜ் 2விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளனர்.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களான ரியான் ரிக்கெல்டன் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பெரிதாக ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஜோடி சேர்ந்த வான் டெர் மற்றும் கிளாசென் நிதானமாக ஆடி இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியில் 29.1 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 181ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன் மூலம் குரூப் பி பிரிவில் 5புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இதையும் படிங்க: பேயாட்டம் ஆடிய தென்னாப்பிரிக்கா... மிரண்டு போன இங்கிலாந்து!!